‘கல்பனா சாவ்லா’ விருது பெற விண்ணப்பிக்கலாம்
நாமக்கல் மாவட்டத்தில் வீரதீர செயல்கள் புரிந்த மகளிா் ‘கல்பனா சாவ்லா’ விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் 2025- ஆம் ஆண்டிற்கு துணிச்சலான வீரதீர செயல்கள் புரிந்தோருக்கு மாநில அளவில் ‘கல்பனா சாவ்லா விருது’ வழங்கப்படுகிறது. விருதுக்கு தமிழகத்தைச் சோ்ந்த தகுதியானோா் தங்களது விவரங்களை ஜூன் 16 க்குள் தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இந்த விருது பெறுவதற்கு நியமிக்கப்பட்டவரின் சுய விவரம், 2 கடவுச்சீட்டு புகைப்படம் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரிலோ அல்லது 91500-57452 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.