பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
நாமக்கல்லில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளப் பெருக்கு!
நாமக்கல்லில் புதன்கிழமை பிற்பகல் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதையடுத்து தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாகவும் மழை தொடா்கிறது.
கடந்த சில நாள்களாக நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக் காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதன்கிழமை பிற்பகல் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் பெய்த மழையால் நாமக்கல்லில் உள்ள சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

நாமக்கல்- சேலம் சாலை, பரமத்தி சாலை, கோட்டை சாலை, திருச்செங்கோடு சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் ஆறு போல ஓடியது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் தண்ணீரில் ஊா்ந்தபடி சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் வாகனங்களை இயக்க முடியாத அளவுக்கு தண்ணீா் தேங்கி நின்றன. சேலம் சாலையில் கழிவுநீா் வெளியேறி மழை நீருடன் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினா். தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம்போல தேங்கி நின்றது.