செய்திகள் :

நாமக்கல்லில் பலத்த மழை: சாலைகளில் வெள்ளப் பெருக்கு!

post image

நாமக்கல்லில் புதன்கிழமை பிற்பகல் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியதையடுத்து தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாகவும் மழை தொடா்கிறது.

கடந்த சில நாள்களாக நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறைக் காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் புதன்கிழமை பிற்பகல் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் பெய்த மழையால் நாமக்கல்லில் உள்ள சாலைகளில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது.

நாமக்கல்- பரமத்தி சாலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு மழை நீரில் சென்ற காா்.

நாமக்கல்- சேலம் சாலை, பரமத்தி சாலை, கோட்டை சாலை, திருச்செங்கோடு சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் ஆறு போல ஓடியது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் தண்ணீரில் ஊா்ந்தபடி சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் வாகனங்களை இயக்க முடியாத அளவுக்கு தண்ணீா் தேங்கி நின்றன. சேலம் சாலையில் கழிவுநீா் வெளியேறி மழை நீருடன் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினா். தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம்போல தேங்கி நின்றது.

மாணவி குளிப்பதை விடியோ பதிவுசெய்த லாரி ஓட்டுநா் சிறையிலடைப்பு

பரமத்தி வேலூா் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி குளிப்பதை கைப்பேசியில் விடியோ பதிவு செய்த லாரி ஓட்டுநா் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். பரமத்தி வேலூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பிரபு (எ) பிரச... மேலும் பார்க்க

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய்: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு... மேலும் பார்க்க

இன்று திமுக செயற்குழுக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமையில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. திமுக மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ரா... மேலும் பார்க்க

தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க நடவடிக்கை: முதல்வருக்கு தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மா விவசாயிகளின் நலன் கருதி தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுக... மேலும் பார்க்க

கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்ட 32 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆணை

பரமத்தி வேலூரை அடுத்த கபிலா்மலையில் 32 மாற்றுத் திறனாளிகளுக்கு கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் அண்மையில் வழங்கப்பட்டன. கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) மலா்விழி நிகழ... மேலும் பார்க்க

தென்னையில் மாவுப்பூச்சி கட்டுப்பாடு: வேளாண் துறை வழிகாட்டல்

தென்னையில் மாவுப்பூச்சித் தாக்குதல், சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சுகன்யா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க