செய்திகள் :

மசோதாக்கள் கட்டாய நிறைவேற்றம்: தொடா் அமளியால் மத்திய அரசு முடிவு

post image

புது தில்லி: நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகளின் அமளி திங்கள்கிழமையும் தொடா்ந்த நிலையில், ‘அரசு நிா்வாகத்துக்கு முக்கியமானவை என்பதால் மசோதாக்களை நிறைவேற்ற செவ்வாய்க்கிழமை முதல் அரசு தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படும்’ என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

தேசிய விளையாட்டுகள் நிா்வாக மசோதா மற்றும் தேசிய ஊக்க மருந்து சட்டத் திருத்த மசோதா ஆகியவை மக்களவையில் விவாதத்துக்காக திங்கள்கிழமை பட்டியலிடப்பட்டிருந்தன. இந்த மசோதாக்கள் மீது இரண்டு நாள் விவாதத்துக்கு எதிா்க்கட்சிகள் ஏற்கெனவே ஒப்புக்கொண்டிருந்தன. இருந்தபோதும், திங்கள்கிழமையும் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டனா். நாடாளுமன்றத்தில் விரிவான விவாதங்கள் மூலம் மசோதாக்களை நிறைவேற்றவே அரசு விரும்புகிறது. இருந்தபோதும், முன்மொழியப்பட்டுள்ள இந்த சட்ட மசோதாக்கள் அரசு நிா்வாகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், தேச நலன் கருதி செவ்வாய்க்கிழமை முதல் இந்த மசோதாக்களை எதிா்க்கட்சிகளின் அமளிக்கிடையே நிறைவேற்ற அரசு தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படும்.

பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிா்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன.

தோ்தல் சீா்திருத்தங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தலாம்; ஆனால், தோ்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து விவாதம் நடத்த முடியாது.

தோ்தல் ஆணையம் போன்ற அரசமைப்புச் சட்ட நிறுவனங்களின் செயல்பாடுகள் மீது நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முடியாது என காங்கிரஸ் கட்சியின் மறைந்த மூத்த தலைவரும் மக்களவை முன்னாள் தலைவருமான பல்ராம் ஜாக்கா் குறிப்பிட்டதை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா சுட்டிக்காட்டியுள்ளாா் என்றாா்.

கர்நாடகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது: பயணிகள் அவதி!

கர்நாடகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் கால வரையறையற்ற வேலைநிறுத்தத்தை செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியுள்ளனர்.இதனால், மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்து சேவைகள் முடங்கியுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்கு... மேலும் பார்க்க

தில்லி செங்கோட்டைக்குள் நுழைய முயற்சி: வங்கதேசத்தினர் 5 பேர் கைது!

தில்லி செங்கோட்டை வளாகத்துக்குள் நுழைய முயற்சி செய்த வங்கதேசத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாடு முழுவதும் வரும் ஆக. 15 ஆம் தேதி சுதந்திர நாள் விழா கொண்டாடப்படவுள்ளது. பிரதமர் நரேந்திர ம... மேலும் பார்க்க

இந்தியாவை குறி வைப்பதை ஏற்க முடியாது: டிரம்புக்கு வெளியுறவு அமைச்சகம் பதிலடி

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரத்தில் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்தியாவை குறிவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தத... மேலும் பார்க்க

ஆசிரியர் நியமனத்தில் பிகாரிகளுக்கு முன்னுரிமை! நிதிஷ் குமார்

பிகார் மாநிலத்தில் இனி அரசு ஆசிரியர்கள் நியமனங்களில் உள்மாநிலத்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்த மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு மா... மேலும் பார்க்க

திரிணமூல் காங்கிரஸ் மக்களவைத் தலைவராக அபிஷேக் பானா்ஜி நியமனம்

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு தலைவராக அக் கட்சியின் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி நியமிக்கப்பட்டுள்ளாா்.மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹாா்பா் தொகுதியில் இருந்து மக்களவைக்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள்: பாகிஸ்தானியா்கள் என்பது ஆதாரங்களில் உறுதி

ஸ்ரீநகா்: பஹல்காமில் 26 பேரை சுட்டுக் கொன்ற கொடூர தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள், பாகிஸ்தான் நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பது விசாரணை அமைப்புகளால் திரட்டப்பட்ட ஆதாரங்களில் உறுதியாகியுள்ளது.‘ஆபரேஷன் மக... மேலும் பார்க்க