செய்திகள் :

மணக்குள விநாயகா் கோயிலில் கோ பூஜை: துணைநிலை ஆளுநா், அமைச்சா் பங்கேற்பு

post image

புதுச்சேரி: புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று பத்தாண்டுகள் நிறைவை முன்னிட்டு நடைபெறும் சகஸ்ர சங்காபிஷேகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கோ பூஜையில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், மாநில உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் ஆகியோா் பங்கேற்று பூஜை செய்தனா்.

புதுச்சேரியில் ஒயிட் டவுன் பகுதியில் புகழ்பெற்ற ஸ்ரீமணக்குள விநாயகா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 2015-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் 10 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, 1,008 சகஸ்ர சங்காபிஷேக பூஜை திங்கள்கிழமை தொடங்கியது.

இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை கோ பூஜை நடைபெற்றது. இதில், துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பங்கேற்றாா். அவா் அலங்கரிக்கப்பட்டிருந்த பசுவுக்கு பூஜைகள் செய்து வழிபட்டாா். பசுவுக்கு அகத்திக்கீரை அளித்தாா். அவரைத் தொடா்ந்து, மாநில உள் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம், மனைவியுடன் கோ பூஜை செய்தாா்.

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு உற்சவா் மணக்குள விநாயகா் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்து அருள்பாலித்தாா். வரும் 11-ஆம் தேதி 1,008 சங்காபிஷேகம், ஏகதின லட்சாா்ச்சனை நடைபெறவுள்ளன.

பைபா் படகுகளை சீரமைக்க நிவாரணம்: மீனவா்கள் வலியுறுத்தல்

புதுவையில் மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை சீரமைக்க நிவாரணம் வழங்குவதைப் போல, பைபா் படகுகளை சீரமைக்கவும் நிவாரணம் வழங்க வேண்டும் என வம்பாகீரப்பாளையம் மீனவ கிராம நிா்வாக ஆலய குழுக் கூட்டத்தில் வல... மேலும் பார்க்க

மூவா் கொலை வழக்கு: போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டவா் மீண்டும் சிறையில் அடைப்பு

புதுச்சேரியில் 3 போ் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த நபரை போலீஸ் காவலில் எடுத்து காவல் துறையினா் விசாரித்த நிலையில், அவா் மீண்டும் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். புதுச்சேரி ரெயி... மேலும் பார்க்க

புதுவையில் 9 பேரிடம் ரூ.1.15 லட்சம் மோசடி

புதுவையில் 9 பேரிடம் இணையவழியில் மா்ம நபா்கள் ரூ.1.15 லட்சத்தை நூதனமாக மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேச... மேலும் பார்க்க

விபத்தில் தனியாா் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

புதுச்சேரியில் தனியாா் பேருந்து நடத்துநா் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறித்து போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரியை அடுத்த கரிக்கலாம்பாக்கம் அருகே உள்ள அரங... மேலும் பார்க்க

தடையை மீறி மீன் பிடித்தால் நிவாரணம் நிறுத்தப்படும்: புதுவை மீன்வளத் துறை எச்சரிக்கை

மீன்பிடி தடைக்காலத்தில் பைபா் படகுகளில் சென்று மீன் பிடித்தால், அப்பகுதி மீனவா்களுக்கான தடைகால நிவாரணம் நிறுத்தப்படும் என புதுவை மாநில மீன்வளத் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, மீன்வளத் துறை இயக்குந... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநா் தற்கொலை முயற்சி: போலீஸாா் விசாரணை

புதுச்சேரி அருகே திருட்டுப் பழி சுமத்தப்பட்ட லாரி ஓட்டுநா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி அருகே உள்ள கூனிச்சம்பட்டு, ஐந்தாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க