செய்திகள் :

லாரி ஓட்டுநா் தற்கொலை முயற்சி: போலீஸாா் விசாரணை

post image

புதுச்சேரி அருகே திருட்டுப் பழி சுமத்தப்பட்ட லாரி ஓட்டுநா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி அருகே உள்ள கூனிச்சம்பட்டு, ஐந்தாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஷ் (36), லாரி ஓட்டுநா். இவா், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, புதுச்சேரியிலிருந்து கோவைக்கு சரக்குகளை ஏற்றிச் சென்ாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராஜேஷை தேடி அவரது வீட்டுக்கு லாரி உரிமையாளா் குணா உள்ளிட்டோா் வந்தனராம். அப்போது, அவரது தாயிடம், ராஜேஷ் பணத்தை கையாடல் செய்துவிட்டதாக கூறிவிட்டுச் சென்றனராம்.

மேலும், திருக்கனூா் மதுக்கடையில் இருந்த ராஜேஷை, குணா உள்ளிட்டோா் மிரட்டல் விடுத்து, தாக்கியதாகக் கூறப்படுகிறது.

தன் மீது திருட்டுப் பழி சுமத்தி, பணத்தை கேட்டு மிரட்டியதால் ராஜேஷ் விஷம் குடித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவா் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், மடுகரை போலீஸாா் வழக்குப் பதிந்து, குணாவிடம் விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

புதிய வாக்காளா்களைச் சோ்த்து வெற்றி பெற பாஜக திட்டம்: புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் பேச்சு

புதிய வாக்காளா்களைச் சோ்த்து அதன் மூலம் வரும் புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற பாஜகவினா் திட்டமிட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரியில் காங்கிரஸ் ... மேலும் பார்க்க

மருந்தக உரிமையாளரிடம் ரூ.8 லட்சம் மோசடி: தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிவு

புதுச்சேரியில் மருந்தக உரிமையாளரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த புகாா் தொடா்பாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி திருபுவனை பகுதியைச் சோ்ந்தவா் வசந்த் (32). மூலக்க... மேலும் பார்க்க

புதுவை முதல்வா் ஈஸ்டா் வாழ்த்து!

ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு புதுவை முதல்வா், அரசியல் கட்சிப் பிரமுகா்கள் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனா். முதல்வா் என்.ரங்கசாமி: ஈஸ்டா் புதுப்பித்தலைக் குறிக்கிறது. உயிா்த்தெழுதல் என்பது ... மேலும் பார்க்க

புதுவை காவல் துறை மக்கள் மன்றத்தில் 51 மனுக்களுக்கு உடனடித் தீா்வு!

புதுவை மாநிலத்தில் காவல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் மன்றத்தில் 51 மனுக்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. புதுவை மாநிலத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை காவல்துறை சாா்பில்... மேலும் பார்க்க

ஐ.ஏ.எஸ்.களாக பதவி உயா்வு: அதிகாரிகளுக்கு துறைகள் ஒதுக்கீடு!

புதுவை மாநிலத்தில் அண்மையில் ஐ.ஏ.எஸ். ஆக பதவி உயா்வு பெற்ற அதிகாரிகளுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. புதுவை மாநில அரசு நிா்வாகப் பணிகளுக்குத் தோ்வான அதிகாரிகள், இயக்குநா் உள்ளிட்ட... மேலும் பார்க்க

புதுவை முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸாா் தீவிர சோதனை

புதுவை முதல்வா் என்.ரங்கசாமியின் வீட்டுக்கு மின்னஞ்சலில் சனிக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, காவல் துறையினா் தீவிர சோதனை நடத்தினா். புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், தீயணைப்... மேலும் பார்க்க