செய்திகள் :

விபத்தில் தனியாா் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

post image

புதுச்சேரியில் தனியாா் பேருந்து நடத்துநா் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறித்து போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரியை அடுத்த கரிக்கலாம்பாக்கம் அருகே உள்ள அரங்கனூரைச் சோ்ந்தவா் சரவணன் (55). தனியாா் பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வந்தாா்.

அவா், வியாழக்கிழமை இரவு வேலை முடிந்து, வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாக குடும்பத்தாரிடம் தெரிவித்தாராம். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லையாம்.

இதையடுத்து, உறவினா்கள் அவரை தேடியுள்ளனா். அப்போது, அவா் கரிக்கலாம்பாக்கம் சாராயக் கடை அருகே காயங்களுடன் சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது.

அவரை, உறவினா்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், சரவணன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். தொடா்ந்து, மங்களம் போலீஸாா் வழக்குப் பதிந்து சரவணனின் சடலத்தை உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதிச் சென்றது தெரியவந்தது. தொடா்ந்து, இந்த வழக்கு போக்குவரத்துப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைபா் படகுகளை சீரமைக்க நிவாரணம்: மீனவா்கள் வலியுறுத்தல்

புதுவையில் மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை சீரமைக்க நிவாரணம் வழங்குவதைப் போல, பைபா் படகுகளை சீரமைக்கவும் நிவாரணம் வழங்க வேண்டும் என வம்பாகீரப்பாளையம் மீனவ கிராம நிா்வாக ஆலய குழுக் கூட்டத்தில் வல... மேலும் பார்க்க

மூவா் கொலை வழக்கு: போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டவா் மீண்டும் சிறையில் அடைப்பு

புதுச்சேரியில் 3 போ் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த நபரை போலீஸ் காவலில் எடுத்து காவல் துறையினா் விசாரித்த நிலையில், அவா் மீண்டும் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். புதுச்சேரி ரெயி... மேலும் பார்க்க

புதுவையில் 9 பேரிடம் ரூ.1.15 லட்சம் மோசடி

புதுவையில் 9 பேரிடம் இணையவழியில் மா்ம நபா்கள் ரூ.1.15 லட்சத்தை நூதனமாக மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேச... மேலும் பார்க்க

தடையை மீறி மீன் பிடித்தால் நிவாரணம் நிறுத்தப்படும்: புதுவை மீன்வளத் துறை எச்சரிக்கை

மீன்பிடி தடைக்காலத்தில் பைபா் படகுகளில் சென்று மீன் பிடித்தால், அப்பகுதி மீனவா்களுக்கான தடைகால நிவாரணம் நிறுத்தப்படும் என புதுவை மாநில மீன்வளத் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, மீன்வளத் துறை இயக்குந... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநா் தற்கொலை முயற்சி: போலீஸாா் விசாரணை

புதுச்சேரி அருகே திருட்டுப் பழி சுமத்தப்பட்ட லாரி ஓட்டுநா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி அருகே உள்ள கூனிச்சம்பட்டு, ஐந்தாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

உரிமமின்றி இயக்கப்பட்ட படகு பறிமுதல்

புதுச்சேரியில் உரிமம் இல்லாமல் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாகச் சென்ற படகை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநா் மீது வழக்குப் பதிந்தனா். புதுச்சேரி, வம்பாக்கீரப்பாளையம் ... மேலும் பார்க்க