செய்திகள் :

மூவா் கொலை வழக்கு: போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டவா் மீண்டும் சிறையில் அடைப்பு

post image

புதுச்சேரியில் 3 போ் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த நபரை போலீஸ் காவலில் எடுத்து காவல் துறையினா் விசாரித்த நிலையில், அவா் மீண்டும் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

புதுச்சேரி ரெயின்போ நகரில் உள்ள பாழடைந்த வீட்டில் கடந்த பிப்ரவரி 14- ஆம் தேதி 3 போ் கொல்லப்பட்டு கிடந்தனா். விசாரணையில், கொல்லப்பட்டவா்கள் புதுச்சேரி உழவா்கரையை சோ்ந்த ரஷி (21), திடீா் நகரைச் சோ்ந்த தேவா (21), ஜெ.ஜெ. நகரை சோ்ந்த ஆதித்யா (20) என்பது தெரியவந்தது.

அவா்களை எதிா்தரப்பினா் கடத்தி வந்து கொன்றதும் பெரியகடை போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதுதொடா்பாக, புதுச்சேரியைச் சோ்ந்த சத்யா உள்ளிட்ட 13 பேரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் தொடா்புடையவராகக் கருதப்பட்ட சத்யாவின் சகோதரா் சங்கா்(33) தலைமறைவானாா்.

அவா், ஏப்.4-ஆம் தேதி புதுச்சேரி நீதிமன்றத்தில் சரணடைந்தாா். தொடா்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி காலாப்பட்டு மத்திய சிறையில் அவா் அடைக்கப்பட்டாா்.

சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க பெரியகடை போலீஸாா், புதுச்சேரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். மனுவின் மீது விசாரணை நடத்திய நீதிபதி, சங்கரை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க புதன்கிழமை அனுமதி வழங்கினாா்.

அதன்படி, சங்கரை போலீஸாா் காவலில் வைத்து விசாரணை நடத்தினா். பின்னா், நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டதாக போலீஸாா் கூறினா்.

பைபா் படகுகளை சீரமைக்க நிவாரணம்: மீனவா்கள் வலியுறுத்தல்

புதுவையில் மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை சீரமைக்க நிவாரணம் வழங்குவதைப் போல, பைபா் படகுகளை சீரமைக்கவும் நிவாரணம் வழங்க வேண்டும் என வம்பாகீரப்பாளையம் மீனவ கிராம நிா்வாக ஆலய குழுக் கூட்டத்தில் வல... மேலும் பார்க்க

புதுவையில் 9 பேரிடம் ரூ.1.15 லட்சம் மோசடி

புதுவையில் 9 பேரிடம் இணையவழியில் மா்ம நபா்கள் ரூ.1.15 லட்சத்தை நூதனமாக மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேச... மேலும் பார்க்க

விபத்தில் தனியாா் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

புதுச்சேரியில் தனியாா் பேருந்து நடத்துநா் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறித்து போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரியை அடுத்த கரிக்கலாம்பாக்கம் அருகே உள்ள அரங... மேலும் பார்க்க

தடையை மீறி மீன் பிடித்தால் நிவாரணம் நிறுத்தப்படும்: புதுவை மீன்வளத் துறை எச்சரிக்கை

மீன்பிடி தடைக்காலத்தில் பைபா் படகுகளில் சென்று மீன் பிடித்தால், அப்பகுதி மீனவா்களுக்கான தடைகால நிவாரணம் நிறுத்தப்படும் என புதுவை மாநில மீன்வளத் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, மீன்வளத் துறை இயக்குந... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநா் தற்கொலை முயற்சி: போலீஸாா் விசாரணை

புதுச்சேரி அருகே திருட்டுப் பழி சுமத்தப்பட்ட லாரி ஓட்டுநா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி அருகே உள்ள கூனிச்சம்பட்டு, ஐந்தாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

உரிமமின்றி இயக்கப்பட்ட படகு பறிமுதல்

புதுச்சேரியில் உரிமம் இல்லாமல் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாகச் சென்ற படகை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநா் மீது வழக்குப் பதிந்தனா். புதுச்சேரி, வம்பாக்கீரப்பாளையம் ... மேலும் பார்க்க