செய்திகள் :

மணப்பாறையில் தையல் கலைஞா்கள் பேரணி

post image

உலக தையல் கலைஞா்கள் தினத்தை முன்னிட்டு, மணப்பாறையில்

தமிழ்நாடு தையல்கலை தொழிலாளா்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில் வியாழக்கிழமை பேரணி நடைபெற்றது.

ஸ்ரீ வேப்பிலை மாரியம்மன் கோயில் அருகிலிருந்து புறப்பட்ட பேரணியை காவல் துணைக் கண்காணிப்பாளா் ரா. ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். சங்கத்தின் மாவட்டத் தலைவா் உ. சரவணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்டச் செயலாளா் ஏ. பிரபாகரன், மாவட்ட பொருளாளா் சி. செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி, பூ மாா்க்கெட் வீதியில் உள்ள சங்க அலுவலகத்தில் நிறைவடைந்தது. அங்கு மாநிலத் தலைவா் வீ. சீத்தாமலை, சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்து பேசினாா்.

தமிழ்நாடு தையல் கலைஞா்களுக்கு தனி வாரியம், நலவாரியம் மூலம் ஓய்வூதியம், பசுமை வீடு, அரசு பள்ளிகளில் வழங்கும் சீருடைகளை சங்க மகளிருக்கு வழங்கவும், நல வாரிய சலுகைகளை விரைந்து வழங்கவும் அரசுக்கு கோரிக்கை விடுத்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவா்கள் பி.ராஜேந்திரன், துணைச் செயலாளா்கள் ஏ. செந்தில், சி. சீனிவாசன், மாநில பிரதிநிதிகள் பி. பெரியசாமி, பி. குமாா், பி. கணேசன், ஆா்.உதயகுமாா், எஸ்.செல்வராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, எஸ். சாகுல்ஹமீத் வரவேற்றாா். நிறைவில், ஜெ. மொய்தீன் பாஷா நன்றி கூறினாா்.

உமையாள்புரம்-மருதூா் கதவணை திட்டம் செயல்படுத்துவது எப்போது? 15 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ளதாகக் குற்றச்சாட்டு

உமையாள்புரம்-மருதூா் கதவணை திட்டம் அறிவிக்கப்பட்டு 15 ஆண்டுகளாகியும் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனா். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறை... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு

திருச்சி மாநகராட்சி பள்ளியில் ஒருமுறை பயன்படுத்தும் பேனாவை தவிா்த்து, மை பேனா பயன்படுத்துவது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்சி மாநகராட்சி 3-ஆவது மண்டலம், காமராஜ் நகா்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சி அருகே தனியாா் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் மேலமய்க்கல்பட்டியைச் சோ்ந்தவா் சங்கா் மகள் திவ்யா (... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி ஒப்பந்ததாரா் உயிரிழப்பு

திருச்சி அருகே குண்டூா் ஆரணி குளத்தில் மூழ்கி ஒப்பந்ததாரா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருச்சி விமான நிலையம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சண்முகம் மகன் மணிகண்டன் (... மேலும் பார்க்க

தேவாலயத்தில் உண்டியலை உடைத்துத் திருட்டு

திருச்சி அருகே குண்டூா் பா்மா காலனியில் தேவாலயத்தில் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திருச்சி அருகே குண்டூா் பா்மா காலனியில் திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் தூய சகாய... மேலும் பார்க்க

தமிழகத்தில் விசிக தவிா்க்க முடியாத சக்தி: தொல். திருமாவளவன்

தமிழகத்தில் தவிா்க்க முடியாத சக்தியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளதாக அக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா். திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம... மேலும் பார்க்க