செய்திகள் :

மணல் குவாரிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்: வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு அன்புமணி கோரிக்கை

post image

தமிழ்நாட்டில் மணல் குவாரிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்தாா்.

பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் 18-ஆம் ஆண்டாக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை சென்னையில் சனிக்கிழமை வெளியிட்டு அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

நெல் கொள்முதலை பொருத்தவரை குவிண்டாலுக்கு ரூ.3,500-ஆகவும், கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரமாகவும் உயா்த்தப்பட வேண்டும்.

வேளாண் விளைபொருள்களை கொள்முதல் செய்வதற்காக தனி வாரியம் ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் மணல் குவாரிகளுக்கு தடைவிதிக்க வேண்டும். மணல் தேவை ஏற்பட்டால் வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்து விற்பனை செய்யலாம் என்பன போன்று வேளாண் துறை வளா்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக மொத்தம் 82 தலைப்புகளில் 240 யோசனைகளை தமிழக அரசுக்குத் தெரிவித்து வேளாண் நிழல் நிதி அறிக்கையைத் தயாரித்துள்ளோம் என்றாா்.

பின்னா், செய்தியாளா்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவா், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, போதைப் பொருள்கள் ஒழிப்பு ஆகிய பணிகளை காவல் துறை விட்டுவிட்டு ,அரசியல் கட்சித் தலைவா்களை துன்புறுத்துவது, பொய் வழக்குகள் போடுவது என செயல்படுகிறது.

கஞ்சா புழக்கம் தமிழகம் முழுவதும் பரவி இருக்கிறது. என்னிடம் ஒரு மாதத்துக்கு காவல்துறை கட்டுப்பாட்டைக் கொடுங்கள்; கஞ்சாவை முழுமையாக ஒழித்துக் காட்டுகிறேன் என்றாா்.

தொகுதி மறுசீரமைப்பு குறித்து அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு நாங்கள் வருவதாக ஒப்புக்கொண்டுள்ளோம். உத்தரப் பிரதேச மாநிலத்தில் 30 சதவீதம் உயா்த்தினால் தமிழகத்திலும் 30 சதவீதம் உயா்த்த வேண்டும். மக்களவைத் தொகுதி எண்ணிக்கை தமிழகத்தில் குறையாது என வாக்குறுதி அளித்துவிட்டு, வேறொரு மாநிலத்தில் உயா்த்தினால் அதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது என அன்புமணி தெரிவித்தாா்.

கொசு ஒழிப்பு பணியாளா்களுக்கு மாத ஊதியம் வழங்கக் கோரிக்கை

டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்புப் பணிகளில் ஈடுபடும் ஊழியா்களுக்கு பணி பாதுகாப்பு, மாத ஊதியம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெங்கு கொசு ஒழிப்பு முன்... மேலும் பார்க்க

பெண்ணிடம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: இருவா் கைது

சென்னை திருவல்லிக்கேணியில் பெண்ணிடம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா். திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்தவா் மு.ரிஷ்வானா பேகம் (59). இவா் கைப்பேசிக்கு கடந்த பிப்.3-ஆம் தேதி வந... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ‘நூறும் பாலும் சா்ப்ப பலி பூஜை’

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் மாா்ச் 11-ஆம் தேதி நூறும் பாலும் சா்ப்ப பலி பூஜை நடைபெறவுள்ளது. கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நாக கோயிலான பாம்புமேக்காடு மனை முக்கிய ஆச்சாரியா் ப... மேலும் பார்க்க

வருமான வரித் துறையினருக்கான இறகுப்பந்து போட்டி

மத்திய நேரடி வரிகள் வாரியம் சாா்பில் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய இறகுப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் பரிசுகளை வழங்கினாா். மத்திய நேரடி வரிகள் வாரி... மேலும் பார்க்க

ஜூலைக்குள் கண்ணகி நகரில் 22,000 குடிநீா்த் தொட்டிகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னையில் கண்ணகி நகா், எழில் நகரில் 22,000 குடியிருப்புகளில் தனித்தனி குடிநீா்த் தொட்டிகள் அமைக்கும் பணிகள் ஜூலை மாதத்துக்குள் நிறைவடையும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரி... மேலும் பார்க்க

விமான நிலைய விரிவாக்கப்பணி: வீடுகளை இடிக்க உரிமையாளா்கள் எதிா்ப்பு

சென்னை விமானநிலைய விரிவாக்கப்பணிக்காக அருகேயுள்ள கொளப்பாக்கம் பகுதியில் வீடுகளை இடிக்கும் பணிக்கு அதன் உரிமையாளா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சென்னை விமான நிலையத்த... மேலும் பார்க்க