செய்திகள் :

மணிப்பூர்: அச்சுறுத்தும் வகையில் விடியோ வெளியிட்ட 2 கிளர்ச்சியாளர்கள் கைது

post image

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரை அச்சுறுத்தும் வகையில் விடியோ வெளியிட்ட 2 கிளர்ச்சியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணிப்பூரில் கிராமத் தொண்டர்கள் சிலரை கைது செய்ததற்காக பாதுகாப்புப் படையினரை அச்சுறுத்தும் வகையில் கிளார்ச்சியாளர்கள் விடியோ வெளியிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தடைசெய்யப்பட்ட காங்கிலிபக் கம்யூனிஸ்ட் கட்சியின் இருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

மொய்ராங்தெம் தொய்பா (36) பிஷ்ணுபூர் மாவட்டத்திலும், சைகோம் லெம்பர்ஸ் சிங் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் இருந்தும் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் பா.ஜ.க புதிய அலுவலகம்- திறந்து வைக்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

சிங்கும் மிரட்டி பணம் பறிப்பதில் ஈடுபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

மற்றொரு நடவடிக்கையில், மணிப்பூர் காவல்துறை மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த குழு தடைசெய்யப்பட்ட ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியின் இரண்டு உறுப்பினர்களைக் கைது செய்தது.

கைது செய்யப்பட்டவர்கள் வாங்கெம் ரோஹித் சிங் (18), தங்ஜம் நோகன் (18) என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் கடைகள் மற்றும் வாகனங்களில் மிரட்டி பணம் பறிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடி: பிரதமா் மோடி நாளை விடுவிப்பு

பாட்னா: பிஎம்-கிஸான் திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு 19-ஆவது தவணையாக சுமாா் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடியை பிரதமா் மோடி திங்கள்கிழமை(பிப்.24) விடுவிக்கவுள்ளாா்.இரண்டு ஹெக்டோ் வரையிலான நிலமுள... மேலும் பார்க்க

திடீரென வெடித்த துப்பாக்கியால் இளம்பெண் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கி வெடித்ததில் இளம்பெண் படுகாயமடைந்தார்.ஜம்மு-காஷ்மீரில் ராஜௌரி மாவட்டத்தில் உள்ள ஷிவானி (21) என்பவர், தனது துப்பாக்கியை வைத்திருந்தபோது எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்ததில் ஷி... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவுக்காக இதுவரை 14,000 ரயில்கள் இயக்கம்!

பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் பக்தர்கள் சிரமமின்றி கலந்துகொள்ள இதுவரை 14 ஆயிரம் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்ப... மேலும் பார்க்க

28 மீ. உயரம்... புதிய சாதனை படைத்த தில்லி மெட்ரோ!

மெட்ரோ வழித்தடத்தை 28.37 மீட்டர் உயரத்தில் அமைத்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளது. ஹைதர்பூர் பட்லி மோர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடமானது, மெட்ரோ ரயில் செல்லும் மிக உ... மேலும் பார்க்க

மதத்தை கேலி செய்து மக்களை பிளவுபடுத்துவதா? பிரதமர் மோடி

மதத்தை கேலி செய்து மக்களை பிளவுபடுத்தும் பணிகளில் சில பிரிவினைவாத சக்திகள் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். பல சூழல்களில் இத்தகைய பிரிவினைவாதிகளுடன் சில வெளிநாட்டு சக்திகள்... மேலும் பார்க்க

நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு மின் பொறியாளர்கள் அமைப்பு அழைப்பு!

புதுதில்லி: மின் துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து, வரும் ஜூன் மாதம் 26ஆம் தேதி அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அகில இந்திய மின் பொறியாளர்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.மின்சார பயன்பா... மேலும் பார்க்க