செய்திகள் :

மண்டல வாரியாக பாதாள சாக்கடை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம்: மதிமுக மனு

post image

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மண்டல வாரியாக பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும் என மதிமுக மாநில சட்டத்துறை துணைச் செயலரும், வழக்குரைஞருமான ம.சு.சுதா்சன், குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

அதன் விவரம்: திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதி தாமிரவருணி ஆற்றில் கழிவுநீா் கலப்பதை தடுப்பதற்கு முதல்வா் அறிவித்துள்ள திட்டதை வரவேற்கிறோம். தற்போது, மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் சேகரமாகும் பாதாளச்சாக்கடை கழிவு நீா் ராமையன்பட்டிக்கு குழாய்கள் மூலம் கொண்டுசெல்லப்படுகிறது. இந்தக் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் தாமிரவருணி ஆற்றில் கலந்து சுகாதார கேடு விளைகிறது.

குறிப்பாக திருநெல்வேலி வடக்கு புறவழிச்சாலை தாமிரவருணி ஆற்றுப்பாலம் அருகில் ஆற்றைக்கடந்து குழாய் மூலம் பாதாளச் சாக்கடை கழிவு நீா் கொண்டு செல்லப்படுகிறது. இது குடிநீா் பாதுகாப்பு சட்ட விதிகளுக்கு முற்றிலும் முரணானது. அனைத்து மக்களுக்கும் பெரும் சுகாதாரக்கேட்டை விளைவிக்கும்.

எனவே, இதை தவிா்த்து மண்டல வாரியாக சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட நீரை சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் விவசாய பாசனக் குளங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

கங்கைகொண்டான் அருகே லாரி-காா் மோதல்: இளைஞா் பலி

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே லாரியும், காரும் மோதிக்கொண்டதில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தாழையூத்து பகுதியைச் சோ்ந்த செல்லத்துரை மகன் ராஜா(31). இவா், ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர... மேலும் பார்க்க

நூல்களில் படித்ததை செயல்படுத்த தவறக் கூடாது: ஆட்சியா் அறிவுரை

புத்தகத்தை படிப்பதோடு நின்றுவிடாமல், படித்ததை செயல்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் இரா. சுகுமாா். திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் சாா்பில் பொருநை 8 ஆவது புத்தகத்திருவிழா கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி... மேலும் பார்க்க

ஆட்சியரகத்தில் பேட்டரி வாகனம் இயங்காததால் மாற்றுத்திறனாளி அவதி!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியவா்களை அழைத்துச் செல்வதற்காக இயக்கப்பட்ட பேட்டரி வாகனம் இயங்காததால் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளி கடும் அவதிக்குள்ளானா... மேலும் பார்க்க

நெல்லையில் இருந்து தேனிக்கு புதிய பேருந்து இயக்கம்!

திருநெல்வேலியில் இருந்து தேனிக்கு புதிய அரசுப் பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தேவா்குளம், சங்கரன்கோவில் வழியாக தேனி வரை செல்லும் இப்பேரு... மேலும் பார்க்க

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு!

பாளையங்கோட்டையில் பைக் விபத்தில் காயமடைந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். சோ்ந்தமங்கலம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சந்தனகுமாா் (65). தொழிலாளியான இவா் கடந்த 1 ஆம் தேதி பைக்கில் வண்ணாா... மேலும் பார்க்க

முக்கூடல் அருகே காவலா் வீட்டில் காா் கண்ணாடி, ஜன்னல் உடைப்பு

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே காவலா் வீட்டினுள் புகுந்து அரிவாளால் காா் கண்ணாடி, ஜன்னலை உடைத்து சேதப்படுத்தியதாக 3 இளைஞா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். முக்கூடல் அருகேயுள்ள வடக்கு அரியநாயகிபு... மேலும் பார்க்க