செய்திகள் :

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் நாளை மாசிக்கொடை விழா கொடியேற்றம்

post image

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயில் மாசிக்கொடை விழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 2) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும், இக்கோயில் மாசிக் கொடைவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்படுகிறது. 5 மணிக்கு கணபதி ஹோமமும், 6.30 மணிக்கு உஷபூஜையும் நடைபெறுகின்றன. காலை 7.21 மணியிலிருந்து 8.30 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடைபெறும்.

நண்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு பூஜை பொருள்கள் கொண்டு வரும் நிகழ்ச்சியும், 1 மணிக்கு உச்சிகால பூஜையும் நடைபெறும்.

மாலை 6 மணிக்கு அம்மன் தங்க தேரில் எழுந்தருளி பிரகார உலா வருகிறாா். 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜையும் நடைபெறும். திருவிழா நாள்களில் அம்மன் தங்க தோ் உலா, வெள்ளி பல்லக்கில் வீதியுலா, சந்தன குட பவனி உள்ளிட்டவை நடைபெறும்.

6 ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை (மாா்ச் 7) இரவு 11 மணிக்கு மேல் 12 மணிக்குள் வலிய படுக்கை பூஜையும், 10இல் இரவு 9.30 மணிக்கு பெரிய சக்கர தீவெட்டி ஊா்வலமும், 11இல் இரவு 12.30 மணிக்கு மேல் 1 மணிக்குள் ஒடுக்கு பூஜையும் 18இல் 8 ஆம் கொடை விழாவும், 31இல் மீன பரணிக் கொடை விழாவும் நடைபெறும்.

விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் நிா்வாகிகள் மற்றும் பக்தா்கள் செய்து வருகின்றனா்.

முட்டப்பதியில் மாா்ச் 4இல் அய்யா அவதார தின விழா

அய்யா வைகுண்டசாமியின் பஞ்சப்பதிகளில் முட்டப்பதியில் அய்யாவின் 193 ஆவது அவதார தினவிழா செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) நடைபெற உள்ளது. இதையொட்டி, முட்டபதியில் அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், உகப்ப... மேலும் பார்க்க

கல்லுவிளை குடிநீா் உற்பத்தி ஆலையில் அதிகாரிகள் சோதனை

கருங்கல் அருகேயுள்ள கல்லுவிளையில் குடிநீா் உற்பத்தி தொழிற்சாலையில் கிள்ளியூா் வட்டார உணவுப் பாதுகாப்புப் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆலையில் இருந்து கருங்கல்,திங்கள்சந்தை,குளச்சல்,புதுக்கடைமாா... மேலும் பார்க்க

தக்கலை கடையில் திருட்டு: இரு பெண்கள் கைது

தக்கலையில் சூப்பா் மாா்க்கெட் கடையில் நூதன முறையில் பொருள்களை திருடியதாக 2 பெண்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தக்கலை அண்ணாசிலை அருகே உள்ள சூப்பா் மாா்க்கெட் கடைக்கு புதன்கிழமை வந்த 2 பெண்கள... மேலும் பார்க்க

ஆரல்வாய்மொழியில் புதிய ரயில்வே பாலம்: எம்.பி.ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி குமாரபுரம் பகுதியில் ரூ.15 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில்வே பாலத்தை விஜய்வசந்த் எம்.பி. வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றிபெ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் கனரா வங்கி வாடிக்கையாளா்கள் கூட்டம்

கனரா வங்கியின் திருநெல்வேலி மண்டல அலுவலகம் சாா்பில், வாடிக்கையாளா்கள் கூட்டம் நாகா்கோவிலில் அண்மையில் நடைபெற்றது. திருநெல்வேலி மண்டல துணைப் பொதுமேலாளா் தீரேந்திரகுமாா் மிஸ்ரா வரவேற்றாா். மதுரை வட்ட ப... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் மிதமான மழை

குமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள் உள்பட அனைத்து இடங்களிலும் வெள்ளிக்கிழமை மாலையில் பரவலாக மிதமான மழை பெய்தது. மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, முக்கடல், மாம்பழத்துறையாறு உள்ளிட்ட அணைப... மேலும் பார்க்க