செய்திகள் :

மண்ணுக்குள் புதைந்திருந்த 90 வருட ரேர் விஸ்கி பாட்டில்கள்... வாக்கிங் சென்றபோது கண்டெடுத்த இளைஞர்!

post image

அமெரிக்காவின் ஜெர்சி நகரத்தின் மார்கேட் பியர் கடற்கரையில் வாக்கிங் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர், சுமார் 90 ஆண்டுகள் பழைமையான விஸ்கி பாட்டில்களைக் கண்டெடுத்துள்ளார்.

ஆஸ்டின் கொன்டெஜியாகோமோ என்ற அந்த நபர், தனது நாயுடன் கடற்கரைக்கு வாக்கிங் சென்றிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக மண்ணில் ஏதோ ஒன்று புதைந்திருப்பதைக் கண்டிருக்கிறார்.

முதலில் அதனை குப்பை என நினைத்த அவர், அதன் பின்னர் பக்கத்தில் சென்று பார்த்தபோது பாட்டில்கள் இருந்துள்ளன.

வெளியே எடுத்து பார்த்த பிறகுதான் தெரிகிறது, அது மிகவும் பழைமையான விஸ்கி பாட்டில்கள் என்று. அப்படி 11 விஸ்கி பாட்டில்களை அவர் கண்டெடுத்துள்ளார்.

அந்த பாட்டில்களில் சீல்கள் பிரிக்கப்படாமல் இருந்துள்ளது. 1930 முதல் 1940களுக்கிடையே தயாரிக்கப்பட்ட Lincoln Inn நிறுவனத்தின் விஸ்கிதான் அவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த தயாரிப்பு கம்பெனி செயல்பாட்டில் இல்லை. 11 விஸ்கி பாட்டில்கள் கடலோரங்களில் எப்படி புதைந்திருக்கும் என்பதற்கு சரியான தகவல்கள் இல்லை. நீண்ட காலத்திற்கு மண்ணில் புதைந்திருந்த இந்த விஸ்கியைக் குடிக்கலாமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

CSK vs MI: அனிருத் இசையுடன் துவங்கிய சென்னை vs மும்பை ஐபிஎல் போட்டி | Photo Album

சென்னை vs மும்பை ஐபிஎல் சென்னை vs மும்பை ஐபிஎல் அனிருத் இசையுடன் துவங்கிய சென்னை vs மும்பை ஐபிஎல் போட்டி அனிருத் இசையுடன் துவங்கிய சென்னை vs மும்பை ஐபிஎல் போட்டி சென்னை vs மும்பை ஐபிஎல் போட்டி மேலும் பார்க்க

காமெடி ஷோ; ஷிண்டேயை துரோகியாக சித்தரித்து பாடல் - மும்பை ஹோட்டலை அடித்து நொறுக்கிய சிவசேனாவினர்

காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வரும் குனால் கம்ரா மும்பையில் நேற்று ஹோட்டல் ஒன்றில் காமெடி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். மும்பை கார்ரோடு பகுதியில் உள்ள யுனிகாண்டினண்டல் ஹோட்டலில் நேற்று இரவு இந்நி... மேலும் பார்க்க

மொபைலில் IPL பார்த்துக்கொண்டே நெடுஞ்சாலையில் பேருந்தை ஓட்டிய அரசு டிரைவர் - மகாராஷ்டிரா அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் சமீப காலமாக அடிக்கடி அரசு பஸ்கள் விபத்துக்குள்ளாகிறது. அதுவும் இரவு நேரத்தில் இது போன்ற விபத்துகள் அதிக அளவில் நடக்கிறது. டிரைவர்கள் பஸ் ஓட்டிக்கொண்டே மொபைல் போனில் வீடியோ பார்ப்பது, ப... மேலும் பார்க்க

``நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தில் நடிகை ரியா சக்கரவர்த்திக்கு தொடர்பு இல்லை'' - சிபிஐ அறிக்கை

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜபுத் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பாலிவுட்டை பெரும் அதிர்ச்சிக்கு... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: ஐபிஎல் டு பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் -இந்த வார கேள்விகளுக்கு ரெடியா?

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பியது, மோடியின் கடந்த மூன்றாண்டு கால வெளிநாட்டு பயணச் செலவு விபரம், பராசக்தி படத்தில் மலையாள நடிகர் இணைந்தது, மெஸ்ஸி ஆட்டோகிராப் படிந்த ஜெர்ஸியை ... மேலும் பார்க்க