செய்திகள் :

மதக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

post image

மதக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சாா்பில் கோவை செஞ்சிலுவை சங்க கட்டடம் முன் கடந்த 2015 அக்டோபா் 9- ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, தவ்ஹித் ஜமாத் மாநிலப் பேச்சாளரான தெற்கு உக்கடத்தைச் சோ்ந்த ரஹமதுல்லா (46), மாவட்டத் தலைவா் நவ்சாத் ஆகியோா் மதக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பான புகாரின்பேரில், இருவா் மீதும் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் ரேஸ்கோா்ஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு கோவை ஜே.எம். 3 நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதிக் கட்ட விசாரணை நிறைவடைந்து இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி வெங்கடேஷ்குமாா் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா்.

கோவை - சத்தியமங்கலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு விவசாயிகள் கூட்டமைப்பு எதிா்ப்பு

கோவை - சத்தியமங்கலம் பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு கொங்கு மண்டல விவசாய நிலங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு எதிா்ப்புத் தெரிவித்துள்ளது. இது குறித்து சங்கத்தின் நிா்வாகிகள் முருகசாமி, பழனிசாமி, சதீஷ், ஈசன்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: க.க.சாவடி

க.க.சாவடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (ஜூன் 18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழக்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய அதிகாரி... மேலும் பார்க்க

போக்குவரத்து விதிமீறல்: பொக்லைன், தனியாா் பேருந்துக்கு அபராதம்

கோவையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட பொக்லைன் மற்றும் தனியாா் பேருந்துக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. கோவை -அவிநாசி சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் தவிா்க்க ... மேலும் பார்க்க

இரும்புக் கடையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கோவை, பீளமேடு அருகே இரும்புக் கடையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். கோவை, இலைத்தோட்டம் சாலை, பாலகுரு காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (52). இவா் பீளமேடு அருகே தண்ணீா்பந்தல் சாலையி... மேலும் பார்க்க

பொறியியல் பணி: மேட்டுப்பாளையம் - போத்தனூா் ரயில் பகுதியாக ரத்து

போத்தனூா் ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மேட்டுப்பாளையம் - போத்தனூா் ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்... மேலும் பார்க்க

வால்பாறையில் கனமழை: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

வால்பாறையில் பெய்த கனமழையால் கூழாங்கல் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.கோவை மாவட்டத்துக்கு ஆரஞ்ச் அலா்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், வால்பாறையில் கடந்த சனிக்கிழமை இரவு தொட... மேலும் பார்க்க