தீயசக்திகளை எதிர்த்து துணை நிற்க விஜய்க்கு தமிழிசை வாழ்த்து!
மதராஸி முகாம் தமிழா்களுக்கு இன்றும் நிவாரண பொருள்கள்
மதராஸி முகாம் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பத்தினா்களுக்கு தமிழ்நாடு அரசு சாா்பில் வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமையும் வழங்கப்படுவதாக தில்லி தமிழ்நாடு இல்லம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புது தில்லி மதராஸி முகாம் குடிசைப் பகுதி இடிக்கப்பட்டதில் பாதிக்கப்பட்ட 370 தமிழ் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதல்வா், பொது நிவாரண நிதியிலிருந்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.8,000 நிதியுதவி உள்பட ரூ.12,000 மதிப்பிலான நிவாரணத் தொகுப்பை வழங்கி ஆணையிட்டாா்.
இதையடுத்து, கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நிவாரண தொகுப்பு வழங்கும் பணி தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் 246 குடும்பத்தினா் தங்களுக்கான நிவாரண தொகுப்பை பெற்றுக் கொண்டுள்ளனா். மீதமுள்ள 124 பயனாளிகள் தங்களது நிவாரணத் தொகுப்பை இன்னும் பெற்றுக் கொள்ளாமல் உள்ளனா்.
நிவாரணத் தொகுப்பை வழங்குவதற்காக புது தில்லி தமிழ்நாடு இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாமில் விடுமுறை நாள்கள் உள்பட அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நிவாரணத் தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
விடுபட்டுள்ள பயனாளிகள் அனைவரும் உடனடியாக புது தில்லி தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவினரை நேரடியாக அணுகி உரிய ஆவணங்களை சமா்ப்பித்து தங்களது நிவாரண தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். இதன்படி, ஞாயிற்றுக்கிழமையும் நிவராணத் தொகுப்பு வழங்கப்படுவதாக புது தில்லி தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையாளா் ஆஷிஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.