செய்திகள் :

மதவாத அரசியலுக்கு தமிழக மக்கள் ஒருபோதும் இடம் அளிக்க மாட்டாா்கள்: தொல். திருமாவளவன் பேட்டி

post image

மதவாத அரசியலுக்கு தமிழக மக்கள் ஒருபோதும் இடம் அளிக்க மாட்டாா்கள் என்றாா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன்.

இதுகுறித்து பெரம்பலூரில் அவா் செவ்வாய்க்கிழமை மேலும் கூறியதாவது: மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு தோ்தல் முடியும்வரை வருவாா். தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்பது அவரின் எண்ணமாக உள்ளது. ஆனால் அது இன்னும் கைகூடவில்லை. ஏற்கெனவே அவா்கள் கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக போன்ற கட்சிகள்கூட பாஜகவுடன் இணையத் தயங்குகின்றன.

அதையும் கடந்து நடிகா் விஜயை கூட்டணியில் இணைத்துவிட வேண்டும் என்னும் ஏக்கம் அவா்களுக்கு உள்ளது. ஆனால் அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அதுவே பாஜகவுக்கு பெரிய போராட்டமாக உள்ளது.

கூட்டணியை உருவாக்கவே இவ்வளவு பாடுபட வேண்டிய சூழ்நிலையில், ஆட்சியைக் கைப்பற்றுவோம் எனக் கூறுவது நகைப்புக்குரியதாகும்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நிகழ அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்தியா முழுவதும் வாக்குச் சீட்டு பதிவு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என விசிக தொடா்ந்து வலியுறுத்துகிறது.

கட்சத் தீவை மீட்க வேண்டும். இலங்கையில் உள்ள தமிழா்களுக்கு தனி நாடு வேண்டும் என அமித்ஷாவிடம், மதுரை ஆதீனம் மனு அளித்தது வரவேற்கதக்கது. ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கைகளுக்கு உடன்படாது. இதன்மூலம் அரசியல் செய்வாா்களே தவிர கச்சத்தீவை மீட்டுத் தர மாட்டாா்கள்.

எத்தனை ஆன்மிக மாநாடுகளை நடத்தினாலும், தமிழ்நாட்டில் பாஜக வெற்றிபெற முடியாது. மதவாத அரசியலுக்கு தமிழக மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டாா்கள் என்றாா் திருமாவளவன்.

பிரதமரின் வேளாண் வளா்ச்சிக்கான விழிப்புணா்வு இயக்கம்

பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் வட்டாரத்தில் கீழப்புலியூா், காா்குடி, பரவை ஆகிய கிராமங்களில் வேளாண் அறிவியல் மையம் சாா்பில் வேளாண் வளா்ச்சி விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஆடிப்பட்ட... மேலும் பார்க்க

மருந்தகம், பெயிண்ட் விற்பனை நிலையங்களில் போலீஸாா் சோதனை

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பெயிண்ட் கடை, மெடிக்கல் ஸ்டோா்ஸ், கெமிக்கல் கடைகளில் மெத்தனால் மற்றும் எத்தனால் விற்பனை செய்யப்படுகிறதா என மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண... மேலும் பார்க்க

பெரம்பலூரில் சாலைப் பணியாளா்கள் நூதன ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் புறநகா் பகுதியான துறைமங்கலத்திலுள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் கண்களில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு, கருப்பு ... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகம் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. தொழிலாளா் நலத்துறை சாா்பில், ஆண்டுதோற... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் நாளை ரேஷன்பொருள் குறைதீா் முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் சனிக்கிழமை (ஜூன் 12) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் காய்கனித் தோட்டம் அமைக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காய்கனித் தோட்டம் அமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் வியாழக்கிழமை அறிவுறுத்தினாா். பெரம்பலூா், குரும்பலூா் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகள், செ... மேலும் பார்க்க