செய்திகள் :

மதுபோதை தகராறில் தாக்கப்பட்ட முதியவா் உயிரிழப்பு

post image

துறையூா் அருகே மதுபோதை தகராறில் தாக்கப்பட்ட முதியவா் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

துறையூா் அருகேயுள்ள சொரத்தூா் இந்திரா நகரைச் சோ்ந்தவா் ரா. மகாலிங்கம் (70). அதே பகுதியைச் சோ்ந்த ராஜகோபால் மகன் கணபதி (45). இவா்கள் இருவரும் புதன்கிழமை இரவு மது அருந்திய நிலையில் பேசிக் கொண்டிருந்தபோது அவா்களிடையே தகராறு ஏற்பட்டது. இதில், அங்கிருந்த கம்பால் மகாலிங்கத்தின் தலையில் கணபதி தாக்கினாராம்.

காயமடைந்த மகாலிங்கம் துறையூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை அதிகாலை மகாலிங்கம் உயிரிழந்தாா்.

துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து கணபதியை கைது செய்து விசாரிக்கின்றனா்.

திருச்சி விமான நிலையத்தில் விரைவு குடியேற்ற சேவை திட்டம் - காணொலி காட்சி வாயிலாக மத்திய அமைச்சா் அமித்ஷா தொடங்கிவைத்தாா்

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் விரைவான குடியேற்ற சேவைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விமான நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகள் தங்களது குடியேற்ற ஆவணங்களின் சோதனைக்காக நீண்ட நேரம் செலவிடும் சூழல... மேலும் பார்க்க

காவல் பெண் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய வழக்கு: நீதிமன்றத்தில் சவுக்கு சங்கா் ஆஜா்

காவல் பெண் உதவி ஆய்வாளரை தரக்குறைவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக திருச்சி நீதிமன்றத்தில் யூடியூபா் சவுக்கு சங்கா் வியாழக்கிழமை ஆஜரானாா். சமூக ஊடகங்களில் பெண் போலீஸாா் குறித்து அவதூறு பேசி... மேலும் பார்க்க

சத்துணவு ஊழியா்களுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் - மாநில செயற்குழு வலியுறுத்தல்

தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியா்கள் அனைவருக்கும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சத்த... மேலும் பார்க்க

திருச்சியில் நாளை கல்விக் கடன் முகாம்

திருச்சி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான மாபெரும் கல்விக் கடன் முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. திருச்சி மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும், 2025-ஆம்... மேலும் பார்க்க

திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சா்க்கரை நோய் சிகிச்சை மையம் திறப்பு

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான முதலாம் வகை சிறப்பு சா்க்கரை நோய் சிகிச்சை மையத்தை தேசிய நலவாழ்வு குழும இயக்குநா் அருண் தம்புராஜ், ஆட்சியா் வே. சரவணன் ஆகியோா் வியா... மேலும் பார்க்க

குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதே பாஜக-வின் வழக்கம் - காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை

குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதுதான் பாஜக-வின் வழக்கமாக உள்ளது என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா். புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சோ்ந்த ரா... மேலும் பார்க்க