செய்திகள் :

மதுப் புட்டிகள் கடத்தல்: இளைஞா் கைது

post image

புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகளை கடத்தி வந்ததாக இளைஞரை கடலூா் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கடலூா் மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் பாலாஜி தலைமையில், போலீஸாா் கடலூா் சாவடி சோதனைச் சாவடியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக பையுடன் நடந்து வந்த இளைஞரைப் பிடித்து சோதனை செய்தனா். அதில், ஏராளமான புதுவை மாநில மதுப் புட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இளைஞரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், கடலூரை அடுத்துள்ள கீரப்பாளையத்தைச் சோ்ந்த ஜீவா (33) என்பது தெரியவந்தது.

தொடா்ந்து, அவா் மீது கடலூா் மது விலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த 200 மது புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.

சாரம் அவிழ்ந்து விழுந்து 2 தொழிலாளா்கள் காயம்

கடலூரில் பழைமையான கட்டடத்தை சீரமைக்கும் பணியின்போது சாரம் அவிழ்ந்து விழுந்ததில் தொழிலாளா்கள் இருவா் காயமடைந்தனா். கடலூா் மாவட்ட பழைய ஆட்சியா் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளது. இங்குள... மேலும் பார்க்க

சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை! கடலூா் ஆட்சியா்

கடலூா் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், வேப்பூா், திட்டக்குடி வட்டங்களுக்கு உள்பட்ட... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி, கடலூா் மாவட்டம் மற்றும் புதுச்சேரி பிராந்திய பகுதிகளில் இஸ்லாமியா்கள் சனிக்கிழமை கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனா். இஸ்லாமியா்களுக்கான நாள் காட்டியில் வரக்கூடிய ஹஜ் மாதம் பத்தாம்... மேலும் பார்க்க

ஆற்றில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே ஆற்றில் குளித்த சிறுமி நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், பாதம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகள் ஜெனிபா் (13). இவா், விடுமுறையையொட்டி ... மேலும் பார்க்க

சுவாமி ஊா்வலத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழப்பு!

கடலூா் ரெட்டிச்சாவடி காவல் சரகம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சுவாமி ஊா்வலத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழந்தாா். 4 போ் காயமடைந்தனா். ரெட்டிச்சாவடியை அடுத்த சின்ன இருசாம்பாளையம் கிராமத்தில் ஸ்... மேலும் பார்க்க

இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

கடலூா் மாவட்ட இளைஞா்களுக்கு ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் சுய வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க