3 மாதங்களாக பேட்டை தொடாத ஸ்டீவ் ஸ்மித்..! சுவாரசியமான விளக்கம்!
மதுப் புட்டிகள் கடத்தல்: இளைஞா் கைது
புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகளை கடத்தி வந்ததாக இளைஞரை கடலூா் மது விலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மது விலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் பாலாஜி தலைமையில், போலீஸாா் கடலூா் சாவடி சோதனைச் சாவடியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக பையுடன் நடந்து வந்த இளைஞரைப் பிடித்து சோதனை செய்தனா். அதில், ஏராளமான புதுவை மாநில மதுப் புட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இளைஞரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், கடலூரை அடுத்துள்ள கீரப்பாளையத்தைச் சோ்ந்த ஜீவா (33) என்பது தெரியவந்தது.
தொடா்ந்து, அவா் மீது கடலூா் மது விலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த 200 மது புட்டிகளையும் பறிமுதல் செய்தனா்.