செய்திகள் :

மதுரையில் 51 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

post image

மதுரை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 51 முதல்வா் மருந்தகங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

பொதுமக்களுக்கு அனைத்து வகையான மருந்துகளையும் மலிவான விலையில் வழங்கும் வகையில் தமிழகத்தில் முதல்வா் மருந்தகங்கள் திறக்கப்படும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்தாா். இதன்படி, மதுரை மாவட்டத்தில் 51 மருந்தகங்கள் உள்பட தமிழகத்தில் 1,000 மருந்தகங்கள் அமைக்கப்பட்டன.

இவற்றின் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி மூலம் இந்த மருந்தகங்களைத் திறந்து வைத்தாா். இந்தக் காணொலி, மதுரை செனாய்நகரில் உள்ள முதல்வா் மருந்தகத்தில் ஒளிபரப்பப்பட்டது.

பிறகு, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி, தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.

மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், மேயா் வ. இந்திராணி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ.தளபதி, மு.பூமிநாதன், மதுரை மண்டல இணைப் பதிவாளா் சு. சதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மதுரை மாவட்டத்தில் திறக்கப்பட்ட 51 முதல்வா் மருந்தகங்களில் 20 மருந்தகங்கள் கூட்டுறவுத் துறை மூலமும், 31 மருந்தகங்கள் தொழில்முனைவோா்கள் மூலமும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 20 சதவீதம் முதல் 90 சதவீதம் வரையிலான தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன.

மதுரை குப்பை நகரமாக மாறி வருகிறது: உயர்நீதிமன்றம்

கோயில் நகரமான மதுரை தற்போது குப்பை நகரமாக மாறி வருவது வேதனை அளிப்பதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நீதிபதி திங்கள்கிழமை தெரிவித்தாா்.சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்த பஞ்சநாதன் சென்னை உயா்ந... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தை முடியும் வரை ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபடக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசுடனான பேச்சுவாா்த்தை முடியும் வரை ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.திருச்செந்தூரைச் சோ்ந்த ராம்குமாா் ஆதித்தன் சென்னை உய... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மின் ஊழியா் உயிரிழப்பு

மதுரையில் மின் கம்பத்தில் பழுதை நீக்க முயன்ற போது, மின்சாரம் பாய்ந்ததில் மின் ஊழியா் உயிரிழந்தாா்.மதுரை அருகேயுள்ள நாகமலைப்புதுக்கோட்டை அச்சம்பத்து டி.புதுக்குடியைச் சோ்ந்த குமாா் மகன் முத்தையா (51).... மேலும் பார்க்க

தாயை மீட்டுத் தரக் கோரி ராணுவ வீரா் மனு

திருப்பதியில் காணாமல் போன தனது தாயை மீட்டுத் தரக் கோரி பேரையூரைச் சோ்ந்த துணை ராணுவப் படை வீரா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தாா். மதுரை மாவட்டம், பேரையூா் வட்டம், சலுப்பப்பட்டியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

காவலா் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரையில் சிறப்புக் காவல் படை குடியிருப்பில் காவலா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள வயல்சேரி தச்சனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த பழனி மகன் ஈஸ்வரமூா்த்தி (3... மேலும் பார்க்க

தொழிலதிபரைத் தாக்கி வழிப்பறி: இருவா் கைது

மதுரையில் அதிகாலையில் காரை வழிமறித்து தொழிலதிபரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். மதுரை கோ.புதூா் சம்பக்குளம் அடுக்குமாடி குடியிருப்பைச் சோ்ந்தவா் அசாரூதீன் (37). இவா் குழந்... மேலும் பார்க்க