செய்திகள் :

மதுரை: `குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு?' - கிராம மக்கள் புகாரால் அதிர்ச்சி

post image

தங்கள் கிராமத்திலுள்ள குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்திருப்பதாக, அமச்சியாபுரம் கிராம மக்கள் எழுப்பியுள்ள புகார் மதுரை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கருப்பட்டி ஊராட்சியிலுள்ள அமச்சியாபுரம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர்.

இந்த கிராமத்திலுள்ள மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மலம் கழித்ததாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

அம்மச்சியாபுரம்: மேல்நிலை குடிநீர் தொட்டி
அம்மச்சியாபுரம்: மேல்நிலை குடிநீர் தொட்டி

இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் புகார் தெரிவித்த கிராம மக்கள்,

"அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை செய்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடனடியாக மருத்துவ குழுவை அமைத்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும், குடிநீர் தொட்டியை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தும் கிராம மக்கள் கடந்த இரண்டு நாட்களாக தண்ணீரை பயன்படுத்தாமல், சமையல் செய்யாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறும்போது,

"நேற்று முன்தினம் காலை தண்ணீர் பிடிக்கும்போது குடிநீரில் கெட்ட வாடை வந்தது, ஏதோ கலந்திருப்பது போல் தோன்றியதால் சந்தேகத்தின் பேரில் நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி பார்த்தபோது மனிதக்கழிவு கலந்திருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தோம்.

அம்மச்சியாபுரம்: கிராம மக்கள்
அம்மச்சியாபுரம்: கிராம மக்கள்

இதுகுறித்து ஊராட்சி செயலாளரிடம் தகவல் தெரிவித்தோம். ஆனால், தற்போதுவரை குடிநீர் தொட்டியை பார்வையிடவோ, சுத்தம் செய்யவோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் இரண்டு நாள்களாக குடிநீரின்றி தவித்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை ஆய்வு செய்து, மருத்துவ முகாம் அமைத்து அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்" என்றனர்.

Doctor Vikatan: குடும்பநல மருத்துவர்; சரியான நபரை எப்படித் தேர்ந்தெடுப்பது?

Doctor Vikatan: குழந்தைகள் முதல் வீட்டிலுள்ள பெரியவர்கள்வரை, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உடல்நலம் பாதிக்கப்படும்போது, உடனே அணுகும்படி குடும்பநல மருத்துவர் ஒருவர் இருக்க வேண்டும் என்று பலரும் சொல்க... மேலும் பார்க்க

Doctor Vikatan: தூக்க மாத்திரைகளுக்கு மாற்றாகுமா மெலட்டோனின் சப்ளிமென்ட்டுகள்?

Doctor Vikatan: நான்கடந்த சில மாதங்களாக தூக்கமின்மையால் பெரிதும் அவதிப்படுகிறேன். மருந்துக் கடையில் தூக்க மாத்திரை வாங்கிப் பயன்படுத்துகிறேன். என்னுடைய தோழி, தூக்க மாத்திரைக்கு பதில் மெலட்டோனின் சப்ளி... மேலும் பார்க்க

மாரத்தான் ஓடும்போதே மரணம்; வராமல் தடுக்க முடியும்! - இதய மருத்துவரின் டேக் கேர் அட்வைஸ்!

உடற்பயிற்சி செய்யும்போது, நடனமாடும்போது சிலர் ஹார்ட் அட்டாக் வந்து இறப்பதை அவ்வப்போது பார்க்கிறோம். அக்டோபர் 5-ம் தேதி, சென்னையைச் சேர்ந்த பரமேஷ் என்பவர் மாரத்தான் போட்டியில் ஓடிக்கொண்டிருக்கையில் சுர... மேலும் பார்க்க

Doctor Vikatan: வீஸிங், ஆஸ்துமா பிரச்னை; இன்ஹேலர், நெபுலைசர் இரண்டில் எது பெஸ்ட்?

Doctor Vikatan:வீஸிங், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் இன்ஹேலர் உபயோகிப்பதற்கும் நெபுலைசர் உபயோகிப்பதற்கும் என்ன வித்தியாசம். இரண்டையுமே உபயோகிக்கலாமா, எது வேகமான நிவாரணம் தரும்?பதில் சொல்கிறார், சென்னையைச... மேலும் பார்க்க

தண்ணீர் கலந்த பாலில் சத்தே இருக்காதா? டயட்டீஷியன் விளக்கம்!

பால் ஏன் அவசியம் அருந்த வேண்டும்; அதில் என்னென்ன சத்துகள் உள்ளன; பாலை காய்ச்சாமல் அப்படியே குடிக்கலாமா; பாலில் தண்ணீர் கலக்கலாமா; யாரெல்லாம் பாலைத் தவிர்க்க வேண்டும் என சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ட... மேலும் பார்க்க

இருமல் மருந்து குடித்து 14 குழந்தைகள் மரணம், தப்பிய தமிழ்நாடு - எச்சரிக்கும் Dr. Rex Sargunam

மத்தியபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் Coldfrif cough Syrup கொடுக்கப்பட்ட 14 குழந்தைகள் மரணமடைந்திருப்பது இந்திய அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட இந்த மருந்தினை தமிழ்நா... மேலும் பார்க்க