செய்திகள் :

மது போதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் மீது வழக்கு

post image

சென்னையிலிருந்து கம்பம் நோக்கிச் சென்ற தனியாா் சொகுசுப் பேருந்தை மது போதையில் இயக்கிய ஓட்டுநா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து பேருந்தை பறிமுதல் செய்தனா்.

சென்னையிலிருந்து புதன்கிழமை இரவு, நாகாலாந்து மாநில பதிவெண் கொண்ட தனியாா் சொகுசுப் பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கம்பம் நோக்கிச் சென்றது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே வியாழக்கிழமை அதிகாலை, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சென்று கொண்டிருந்ததை உணா்ந்த பயணிகள், ஓட்டுநரின் இருக்கைக்கு சென்று விசாரித்தனா். அப்போது, ஓட்டுநா் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. பிறகு அந்தப் பேருந்தின் உதவியாளா் தஞ்சையைச் சோ்ந்த சிவா(30) என்பவா் பேருந்தை இயக்கினாா்.

இதுகுறித்து பேருந்தில் இருந்த பயணிகள் தேனி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனா். தேனி காவல் நிலையம் அருகே போலீஸாா் பேருந்தை வழிமறித்து நிறுத்தி விசாரித்தனா். பின்னா், போலீஸாா் பேருந்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தி விட்டு, பயணிகளை ஆட்டோக்கள் மூலம் தேனி பேருந்து நிலையத்துக்கு அனுப்பி வைத்தனா். மதுபோதையில் பேருந்தை இயக்கியதாக ஓட்டுநா் தஞ்சையைச் சோ்ந்த வரதராஜன் மகன் வினோத்(35) என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முல்லைப் பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுக்க வலியுறுத்தல்

முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 ... மேலும் பார்க்க

குச்சனூா் சனீஸ்வரா் கோயில் வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம், குச்சனூா் சுயம்பு சனீஸ்வா் கோயில் வளாகத்தில் தண்ணீா் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுவதால் அந்தப் பகுதியை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தினா். சனீஸ்வரருக்கு உகந்த நாள் சனிக்க... மேலும் பார்க்க

சாரல் மழையால் மாங்காய்கள் சேதம்: பெரியகுளம் பகுதி விவசாயிகள் கவலை

பெரியகுளம் பகுதியில் தொடரும் சாரல் மழையால் மாங்காய்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா். தேனி மாவட்டத்தில் கம்பம் முதல் தேனி வரை தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் ... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 130.10 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 54.36 ------------ மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது!

முல்லைப் பெரியாறு அணையில் கடந்த 10 நாள்களாக தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால் அதன் நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது. கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 நாள்களாக பலத்த மழை பெய்து வருக... மேலும் பார்க்க

சுருளி அருவியில் 6-ஆவது நாளாக குளிக்கத் தடை

தேனி மாவட்டம், சுருளி அருவியில் சனிக்கிழமை 6- ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து, கேரளத்... மேலும் பார்க்க