செய்திகள் :

மத்திய அமைச்சர் மகளிடம் தகராறு: ஒருவர் கைது

post image

மகாராஷ்டிரத்தில் மத்திய அமைச்சர் மகளிடம் தகராறு செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகராஷ்டிர மாநிலம், முக்தைநகரில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவின் போது மத்திய இணை அமைச்சர் ரக்ஷா காட்சேவின் மகள் மற்றும் சிறுமிகள் கலந்துகொண்டனர்.

அப்போது அங்கிருந்த இளைஞர்கள் சிலர் சிறுமிகளை பின்தொடர்ந்து தகாத கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் சிறுமிகளை அவர்கள் தங்களின் மொபைல்களிலும் புகைப்படம் எடுக்க முயன்றுள்ளனர்.

இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் ரக்ஷா காட்சே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம், நான் மத்திய அமைச்சராகவும், எம்.பி.யாகவும் இங்கு வரவில்லை.

நியூஸி. முதலில் பந்துவீச்சு: இந்தியா திணறல் தொடக்கம்!

நீதி கேட்டு ஒரு தாயாக காவல் நிலையத்திற்கு வந்துள்ளேன். முதல்வரை சந்தித்து இதுபோன்ற சம்பவங்களில் நடவடிக்கை எடுக்கக் கோருவேன் என்று கூறினார்.

புகாரின் பேரில், போக்ஸோ உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

மற்ற 6 பேரை தேடி வருகின்றனர். கைதான அனிகேத் மீது ஏற்கெனவே இரண்டு முதல் நான்கு வழக்குகள் உள்ளன என்று காவலர்கள் தரப்பில் தெரிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஜெய்சங்கருடன் பெல்ஜியம் இளவரசி சந்திப்பு!

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள பெல்ஜியம் இளவரசியை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று(மார்ச் 3) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினரான பெல்ஜியம் நாட்டின் இளவரசி ஐரோப்பிய ஒன்றிய உயரதிகாரிகள் குழ... மேலும் பார்க்க

பார்வைத் திறன் குறைபாடுடையோரும் நீதிபதிகளாக நியமிக்கப்படத் தகுதியுடையவர்கள்! -உச்சநீதிமன்றம்

பார்வைத் திறனற்ற மாற்றுத்திறனாளிகளும் நீதிபதிகளாகத் தகுதியுடையோரே என்பதை மீண்டும் ஒருமுறை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. உடல் குறைபாட்டை காரணம்காட்டி நீதியியல் துறையில் எந்த்வொரு நபருக்கும் பணி... மேலும் பார்க்க

ஐக்கிய அரபு அமீரகத்தில் உ.பி. பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பிப்.15ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய வெளியுறவு விவகாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை: அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சித் தகவல்!

ஹரியாணா மாநிலத்தில் காங்கிரஸ் பெண் தொண்டர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் பல அதிர்ச்சித் தகவல்களை காவல்துறை வெளியிட்டுள்ளது.காங்கிரஸ் பெண் தொண்டர் கொலை வழக்கில் கைதான சச்சின், ஏற்கனவே திருமணமானவர் என்று... மேலும் பார்க்க

கேரளத்தில் 10ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த துயரம்! ஒரு வாரத்தில் 2-வது பலி!!

கேரள மாநிலத்தில், கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்) நோய்க்கு ஒரே வாரத்தில் இரண்டாவது நபர் பலியான சம்பவத்தால், அங்கு மக்கள் கவலை அடைந்துள்ளனர்.பத்தாம் வகுப்பு மாணவிக்கு கில்லன் பாரே சின்ட்ரோம் (ஜிபிஎஸ்... மேலும் பார்க்க

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடுவரா? -பாஜக கிண்டல்

ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ராகுல் காந்தி கிரிக்கெட் விளையாடுவரா? என்று பாஜக தரப்பு கேலி செய்து விமர்சித்துள்ளது.காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஷாமா முகமது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா க... மேலும் பார்க்க