செய்திகள் :

மத்திய அரசால் அதிகம் பாதிப்படைவது நானும், பினராயி விஜயனும்தான்! - முதல்வர் ஸ்டாலின்

post image

பாஜகவால் அதிகம் பாதிப்படைவது நானும், பினராயி விஜயனும்தான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டம் இன்று மதுரையில் நடைபெறுகிறது. மதுரை மாநகரத்தை தூங்காநகரம் என்று அழைப்பதுண்டு. தற்போது தூங்காநகரம் சிவப்பு நகரமாக மாறியிருக்கிறது. எங்கும் சிவப்பாக இருக்கிறது. திமுக கொடியிலும் பாதி சிவப்பு இருக்கிறது. எங்களில் பாதி நீங்கள்.

தன்னை ஒரு கம்யூனிஸ்டாக காட்டிக்கொண்டவர் கருணாநிதி. சென்னையில் விரைவில் கார்ல் மார்க் சிலை நிறுவப்பட இருக்கிறது என்று பேரவையில் பேசிவிட்டு தற்போது உங்கள் முன்னாள் நின்று கொண்டிருக்கிறேன். இந்தக் கொள்கை உறவோடு எல்லாத்தையும் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும். மாற்றத்தை நோக்கி நகர வேண்டும்.

2019 ஆம் ஆண்டு முதல் இணைந்து பயணித்து வருகிறோம். தமிழ்நாட்டில் உள்ள இந்தக் கூட்டணியில் விரிசல் வராத என்று சில நினைத்துக் கொண்டிருக்கின்றனர். கூட்டாட்சி என்றாலே மத்திய அரசுக்கு அலர்ஜியாக இருக்கிறது. சீதாராம் யெச்சூரி பொதுவுடைமை சிந்தனைக்காக கடுமையாக போராடியவர்.

எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் முழுநேர அரசியல் வாதியாக செயல்பட வைக்கிறார்கள், மாநிலங்களே இருக்க கூடாது என நினைக்கிறார்கள், வக்ஃப் சட்டத்தை நள்ளிரவில் நிறைவேற்றி உள்ளார்கள். கூட்டாட்சி தத்துவத்தை தொகுதி மறுசீரமைப்பு மூலம் சிதைக்க நினைக்கிறார்கள். மத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டும்தான் இந்தியாவில் சுயாட்சி காப்பாற்றப்படும். பாஜகவால் அதிகம் பாதிப்படைவது நானும், பினராயி விஜயனும்தான்” என்றார்.

சென்னை: சிறுவன் ஏற்படுத்திய விபத்தில் காயமடைந்த முதியவர் பலி!

சென்னையில் காரை ஓட்டிய 14 வயது சிறுவன் ஏற்படுத்திய விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சைப் பலனின்றி வியாழக்கிழமை காலை பலியானார்.சென்னை, குமரன் நகரில் 5-ஆவது குறுக்குத் தெருவில் கடந்த திங்கள்கிழமை 1... மேலும் பார்க்க

மேட்டூர் அணை: ஜூன் 12-ல் திறந்து வைக்கிறார் முதல்வர்!

மேட்டூர் அணையை வருகின்ற ஜூன் 12 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைக்கவுள்ளதாக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் மங்கத்ராம்சர்மா தெரிவித்துள்ளார்.மேட்டூர் அணையில் தமிழக நீர்வளத் துறையின... மேலும் பார்க்க

அமைச்சர் நேருவின் சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமச்சந்திரன் வீடு, அலுவலகங்களில் 3 நாள்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது.அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமச்சந்திரன் ம... மேலும் பார்க்க

மருதமலை அடிவாரத்தில் வெள்ளிவேல் திருடியவர் கைது!

கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் அடிவாரத்தில் உள்ள தியான மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த வெள்ளிவேலை திருடியவரை காவல்துறையினர் கைது செய்யதுள்ளனர்.கோவை மாவட்டம், மருதமலை அருள்மிகு ... மேலும் பார்க்க

உதிா்ந்தது இலக்கிய ரோஜா!

அரசியல் வானில் பூத்துக் குலுங்கிய இலக்கிய ரோஜா உதிா்ந்தது. ஆம், காமராஜரின் பெருந்தொண்டன் குமரி அனந்தன் (93)) மறைந்தாா். கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் 1933, மாா்ச் 19-இல் சுதந்திரப் போராட்ட த... மேலும் பார்க்க

புயல் சின்னம் இன்று வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) மத்திய வங்கக் கடல் நோக்கி நகா்ந்து படிப்படியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் பி.அமுதா தெரிவித்தாா். இது க... மேலும் பார்க்க