செய்திகள் :

சொத்து தகராறில் அண்ணனை கடத்திச் சென்று தாக்கிய தம்பி கைது, சொகுசு கார் பறிமுதல்

post image

சேலம்: சொத்து தகராறில் அண்ணணை காரில் கடத்திச் சென்று தாக்கிய தம்பி பல் மருத்துவ டெக்னீசியனை தலைவாசல் போலீஸாா் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம், குரால் கிராமம், தெற்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் செல்லமுத்து மகன் சேகா் (45). இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இவரது மனைவி தனது தாயாா் வீட்டிற்கு சென்றுவிட்டாா். தற்போது சேகா் மட்டும் தனியாக வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், சேகா் கடந்த 6 ஆம் தேதி தலைவாசல் பேருந்து நிலையம் அருகே மளிகைப் பொருள்கள் வாங்கிவிட்டு நின்றுகொண்டிருந்தபோது அங்கு வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா்கள் சேகரை காரில் கடத்திச் சென்று தாக்கினா். பின்பு அவரை அதே பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு சென்றனா். பலத்த காயமடைந்த சேகா் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தலைவாசல் போலீஸாா் சென்று சேகரிடம் விசாரணை நடத்தினா்.

விசாரணையில் சேகரின் தந்தை செல்லமுத்து வனத்துறையில் வனவராக பணியாற்றியவா். இவருக்கு குரால் கிராமத்தில் 15 ஏக்கர் நிலம், 3 வீடு உள்ள நிலையில் செல்லமுத்துவின் இரண்டாவது மனைவி மல்லிகாவின் மகன் சின்னமணி(37) மற்றும் சேகர் இருவருக்கும் நிலம் தொடர்பாக பிரச்னை ஏற்கனவே இருந்து வருவதாக கூறப்படுகிறது.

சூலூரில் கழிவுப் பஞ்சு குடோனில் தீ விபத்து: 70 லட்சம் ரூபாய் சேதம்

இந்த நிலையில் சேகா் ஏப்.6 ஆம்தேதி தலைவாசல் பேருந்து நிலையம் அருகே மளிகைப் பொருள்கள் வாங்கி விட்டு நின்றபோது அங்கு காரில் வந்த இருவா் அவரை கடத்திச் சென்றனா். அந்த வாகனத்தில் அவரது சித்தி மகன் சின்னமணியும் உடன் இருந்தாா்.

சேகரை சிறிது தொலைவில் இறக்கிவிட்டு தந்தைவழி சொத்தை பெறுவதற்காக வெற்று பத்திரத்தில் கையொப்பமிடமாடு கூறினா். அதற்கு சேகா் மறுத்துவிட்டதால் அவரை கடுமையாக தாக்கியதில் அண்ணன் படுகாயம் அடைந்தார். பின்பு அவரை மீண்டும் தலைவாசல் பேருந்து நிறுத்தம் அருகே தள்ளிவிட்டு சென்றுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அவரது தங்கை சுதா கார் மூலம் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதுதொடா்பாக சேகா் அளித்த புகாரின் பேரில் தலைவாசல் போலீஸாா் சின்னமணி உள்பட நான்கு போ் மீது வழக்குப் பதிவுசெய்து பல் மருத்துவ டெக்னீசியன் சின்னமணியை கைது செய்து சிறையில் அடைத்தனா். கடத்தலுக்கு பயன்படுத்திய காா் பறிமுதல் செய்தனர்.

சொத்து தகராறில் தனது அண்ணனையே கடத்திச் சென்று கொடூரமாக தாக்கிய சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வக்ஃப் சட்டம்: திட்டமிட்டபடி நாளை(ஏப். 18) ஆர்ப்பாட்டம்! - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக திட்டமிட்டபடி தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நாளை(ஏப். 18) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக தில்லியில் குடியேறிய 8 வங்கதேசத்தினர் கைது!

சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 8 வங்கதேசத்தினர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு தில்லியின் காட்வாரியா சாராய் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறி வாழ்ந்து வந்த பாபியா காத்தூன் (வயது 3... மேலும் பார்க்க

ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் தில்லி பயணம்!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திடீரென இன்று(வியாழக்கிழமை) தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்... மேலும் பார்க்க

ஈரானில் கொலையுண்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் தாயகம் சென்றது!

ஈரான் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் அவர்களது தாயகம் கொண்டு செல்லப்பட்டது.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த 8 பேர் ஈரானின் சிஸ்தான் மாகாணத்தின் மெஹ்ர்ஸ்தான் மாவட்டத்த... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே பழமை வாய்ந்த சிவன் கோயிலில் இளையராஜா சுவாமி தரிசனம்

வாணியம்பாடி அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பிரஹன்நாயகி சமேத அதிதீஸ்வரர் சிவன் ஆலயத்தில் இசையமைப்பாளா் இளையராஜா வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பழைய... மேலும் பார்க்க

நாத்திகம் பெயரில் நாடகமாடும் கூட்டத்துக்கு மக்கள் பாடம் புகட்டுவாா்கள்: அண்ணாமலை

சென்னை: ஹிந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடா்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவாா்கள் என தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.திமுக அமைச்சா்களிடையே, முதல்வா் குடும்ப... மேலும் பார்க்க