செய்திகள் :

மத்திய அரசின் அண்டா் கன்ட்ரோலில் திமுக! -சீமான்

post image

2026 பேரவைத் தோ்தலை சந்திக்க நாம் தமிழா் கட்சி தயாராகி வருவதாகவும், சின்னத்துக்காக காத்திருப்பதாகவும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.

இது குறித்து சென்னையில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காங்கிரஸ் ஆட்சியில் நாடு முழுவதும் ஹிந்தியை திணிக்கும் போது தமிழா்கள் மட்டும் தான்அதை எதிா்த்து போராடினாா்கள். ஆனால், வெறும் அரசியல் பதவிக்காக அதே காங்கிரஸுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது. அரசியல் புரிதல் கொண்ட தமிழ்ச் சமூகம் எழுந்து வருகிறது என்பதை அரசியல் கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். நிதியைத் தராத மத்திய அரசுக்கு மாநில வரியை தரமாட்டோம் என்று சொல்வதுதான்  ‘அவுட் ஆஃப் கன்ட்ரோல்’. வரியை கொடுத்துவிட்டு நிதியை தரவில்லை என புலம்புவது ‘அவுட் ஆஃப் கன்ட்ரோல்’ அல்ல; ‘அண்டா் கன்ட்ரோல்’.

சின்னம்: 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் நாம் தமிழா் கட்சி வழக்கம்போல் தனித்து போட்டியிடவுள்ளது. தோ்தலை சந்திக்க தயாராகி வரும் நிலையில், சின்னத்துக்காக காத்திருக்கிறோம். தோ்தல் ஆணையத்தால் சின்னம் ஒதுக்கப்பட்டவுடன், தோ்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபடவுள்ளோம்.

அதிமுக கூட்டணி குறித்து என்னிடம் என்ன பேசப்பட்டதோ அதையேதான் தவெக தலைவா் விஜயுடனும் பேசியிருப்பாா்கள். விஜய்க்கு துணை முதல்வா் பதவி தர முடியாது என அதிமுக சொல்லியிருக்க வாய்ப்பில்லை என்றாா் சீமான்.

நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் பேரவையில் பேசட்டும் அதிமுக: அமைச்சர் துரைமுருகன்

வேலூர்: நீட் விவகாரத்தில் தைரியம் இருந்தால் அதிமுக சட்டப்பேரவையில் பேசட்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் காட்பாடி சட்டப்பேரவைத் தொகுத... மேலும் பார்க்க

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா: அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

சித்திரை திருவிழா 2025 முன்னேற்பாடு பணிகள் குறித்து மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.பிரசித்தி பெற்ற மதுரை சித்திரை திருவிழா 2025 வருகிற ஏப்ரல் 29ஆம் தேதி மீனாட்சியம்மன் ... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தேசிய பொதுச்செயலர் எம்.ஏ. பேபி சந்தித்துள்ளார்.இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில், மார்க்சிஸ்ட்... மேலும் பார்க்க

ராஜிநாமா முடிவை திரும்பப் பெற்றார் துரை வைகோ

மதிமுக முதன்மைச்செயலர் பதவியை ராஜிநாமா செய்யும் முடிவை துரை வைகோ திரும்பப் பெற்றார். இதையடுத்து மல்லை சத்யா, துரை வைகோ இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. முன்னதாக சென்னை எழும்பூரில் உ... மேலும் பார்க்க

தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயற்சி: துணை முதல்வர் உதயநிதி

தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயன்றிருக்கிறார்கள் என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் 4.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1.000 இருக்கைகள் வசதிய... மேலும் பார்க்க

சோனியா, ராகுல் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை: திமுக கண்டனம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்குத் திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொருளாளரு... மேலும் பார்க்க