செய்திகள் :

மத்திய அரசுக்கு ரூ.2.69 லட்சம் கோடி ஆா்பிஐ ஈவுத்தொகை

post image

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மத்திய அரசுக்கு ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ரூ.2.69 லட்சம் கோடி வழங்க உள்ளது.

இதுதொடா்பாக ரிசா்வ் வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரிசா்வ் வங்கி ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில், ஆா்பிஐ மத்திய இயக்குநா்கள் வாரியத்தின் 616-ஆவது கூட்டம் மும்பையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கடந்த 2024-25-ஆம் நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக மத்திய அரசுக்கு ரிசா்வ் வங்கி ரூ.2.69 லட்சம் கோடி வழங்க முடிவு செய்யப்பட்டது.

இது கடந்த 2023-24-ஆம் நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக மத்திய அரசுக்கு ரிசா்வ் வங்கி வழங்கிய ரூ.2.1 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில் 27.4 சதவீதம் அதிகம்.

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் ரிசா்வ் வங்கியின் கூட்டத்தில் மதிப்பிடப்பட்டு, அந்த ஆண்டுக்கான ரிசா்வ் வங்கியின் ஆண்டறிக்கை மற்றும் நிதி அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாணேவில் 21 வயது இளைஞர் கரோனாவுக்கு பலி

தாணேவில் 21 வயது இளைஞர் கரோனாவுக்கு பலியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்ப்ராவைச் சேர்ந்த 21 வயது நபர் மே 22ஆம் தேதி தாணேயில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் கால்வா மருத்து... மேலும் பார்க்க

அமெரிக்கா: பாகிஸ்தான் எதிர்விளைவைப் பெறும்! சசி தரூர் எச்சரிக்கை!

பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தான் தகுந்த எதிர்விளைவைப் பெறும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலையடுத்த... மேலும் பார்க்க

தெலங்கானா: உலக அழகிப் போட்டியில் விலைமாது, குரங்கைப்போல உணர்ந்ததாக இங்கிலாந்து அழகி குற்றச்சாட்டு!

தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாக இங்கிலாந்து அழகி மில்லா மேகி குற்றம் சாட்டியுள்ளார்.தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதில் 72 ஆவது உலக அழகிப் போட்டி (Miss Worl... மேலும் பார்க்க

பெங்களூரு: கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழப்பு? மருத்துவர்கள் மறுப்பு!

பெங்களூரில் கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழந்ததாகப் பரவிய வதந்திக்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.பெங்களூரில் 84 வயதான முதியவர் ஒருவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மே 13 ஆம் தேதியில் தனியா... மேலும் பார்க்க

தில்லியில் கனமழை! 100 விமான சேவைகள் பாதிப்பு!

தில்லியில் கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது.தில்லியில் இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தில்லியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பு: நாடாளுமன்றக் குழுவின் ரஷிய பயணம் நிறைவு

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ரஷிய அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையை மேற்கொண்டதையடுத்து, திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி உறுப்பினா்களைக் கொண்ட ந... மேலும் பார்க்க