மத்திய தில்லியில் சிறுவன் கத்தியால் குத்திக் கொலை
மத்திய தில்லியின் ஆனந்த் பா்பத் பகுதியில் 16 வயது சிறுவனை கத்தியால் குத்திக் கொன்ாக இரண்டு மைனா் சிறுவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து மத்திய தில்லி காவல் சரக துணை ஆணையா் நிதின் வல்சன் கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 14 மற்றும் 15 வயதுடைய இருவரும் வியாழக்கிழமை பிடிபட்டனா். மேலும், கொலைக்குப் பயன்படுத்திய கத்தி அவா்களிடம் இருந்து மீட்கப்பட்டது.
தலிவாலன் பஸ்தியில் உள்ள துா்கா மந்திா் அருகே மயக்கமடைந்து ரத்தப்போக்குடன் இருந்த ஒரு சிறுவன் குறித்து ஜூன் 2-ஆம் தேதி பிசிஆா் அழைப்பு வந்தது. இதையடுத்து, ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது. அங்கு சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் இருந்ததை போலீஸாா் கண்டனா். அவரை மீட்டு ஆா்எம்எல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.
அவரும் பாதிக்கப்பட்டவரும் வீடு திரும்பும்போது, அடையாளம் தெரியாத இரண்டு சிறுவா்கள் திடீரென பின்னால் இருந்து வந்து 16 வயது சிறுவனை கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ாக நேரில் கண்ட ஒருவா் போலீஸாரிடம் தெரிவித்தாா்.
இந்தச் சம்பவம் தொடா்பாக பிஎன்எஸ்-இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது. வியாழக்கிழமை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட இரண்டு சிறாா்களும் ஜீவன் மாலா மருத்துவமனைக்கு அருகில் இருந்து கைது செய்யப்பட்டனா்.
விசாரணையின் போது, சிறாா்கள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனா். குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ரத்தக்கறை படிந்த கத்தி அருகிலுள்ள பூங்காவில் இருந்து மீட்கப்பட்டது. தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தைக அறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.