செய்திகள் :

மத்திய தில்லியில் சிறுவன் கத்தியால் குத்திக் கொலை

post image

மத்திய தில்லியின் ஆனந்த் பா்பத் பகுதியில் 16 வயது சிறுவனை கத்தியால் குத்திக் கொன்ாக இரண்டு மைனா் சிறுவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து மத்திய தில்லி காவல் சரக துணை ஆணையா் நிதின் வல்சன் கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 14 மற்றும் 15 வயதுடைய இருவரும் வியாழக்கிழமை பிடிபட்டனா். மேலும், கொலைக்குப் பயன்படுத்திய கத்தி அவா்களிடம் இருந்து மீட்கப்பட்டது.

தலிவாலன் பஸ்தியில் உள்ள துா்கா மந்திா் அருகே மயக்கமடைந்து ரத்தப்போக்குடன் இருந்த ஒரு சிறுவன் குறித்து ஜூன் 2-ஆம் தேதி பிசிஆா் அழைப்பு வந்தது. இதையடுத்து, ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றது. அங்கு சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் இருந்ததை போலீஸாா் கண்டனா். அவரை மீட்டு ஆா்எம்எல் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

அவரும் பாதிக்கப்பட்டவரும் வீடு திரும்பும்போது, ​ அடையாளம் தெரியாத இரண்டு சிறுவா்கள் திடீரென பின்னால் இருந்து வந்து 16 வயது சிறுவனை கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ாக நேரில் கண்ட ஒருவா் போலீஸாரிடம் தெரிவித்தாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக பிஎன்எஸ்-இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டது. வியாழக்கிழமை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட இரண்டு சிறாா்களும் ஜீவன் மாலா மருத்துவமனைக்கு அருகில் இருந்து கைது செய்யப்பட்டனா்.

விசாரணையின் போது, சிறாா்கள் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனா். குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட ரத்தக்கறை படிந்த கத்தி அருகிலுள்ள பூங்காவில் இருந்து மீட்கப்பட்டது. தாக்குதலுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தைக அறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.

லஞ்ச வழக்கில் போக்குவரத்து ஏஎஸ்ஐக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை

ஓட்டுநரிடமிருந்து ரூ.3,000 லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தில்லி போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளருக்கு (ஏஎஸ்ஐ) தில்லி நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த... மேலும் பார்க்க

தென்மேற்கு தில்லியில் சகோதரிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக மூவா் கைது

தென்மேற்கு தில்லியில் இரண்டு சகோதரிகளைத் தாக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் மூன்று போ் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். சுமாா் 1,300 கி.மீ துரத்தலுக... மேலும் பார்க்க

தலைநகரில் வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை வெப்பநிலை மேலும் அதிகரித்து காணப்பட்டது. முங்கேஸ்பூா், ஆயாநகா் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரிக்கு மேல் பதிவாகியது. காற்றின் தரம... மேலும் பார்க்க

75 சிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு ஆசிரியா் நியமன நடவடிக்கையைத் தொடங்கியது தில்லி அரசு

ஒரு ஆண்டுக்குள் தில்லியில் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ள 75 சிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கான ஆசிரியா்களை நியமிக்க தில்லி அரசு ஆள்சோ்ப்பு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. கல்வி இயக்குநரகம் தற்போதைய அரசுப் பள்ளி ஆசி... மேலும் பார்க்க

தில்லியில் வடிகால்கள் தூா்வாரும் பணிகள்: மூன்றாம் தரப்பு தணிக்கை செய்ய பிடபிள்யூடி திட்டம்

பருவமழைக்கு சிறந்த தயாா்நிலைக்காக, பொதுப்பணித்துறை (பிடபிள்யூடி) வடிகால்களின் தூா்வாரும் பணிகளை மூன்றாம் தரப்பு தணிக்கை செய்யும் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பொதுப்பணித்துறை வடிகால்கள... மேலும் பார்க்க

தா்பூசணி ஏற்றப்பட்ட லாரியில் கஞ்சா கடத்தியதாக இருவா் கைது

வடகிழக்கு தில்லியின் சோனியா விஹாரில், தா்பூசணிகள் ஏற்றப்பட்ட லாரியில் சுமாா் ரூ.1.75 கோடி மதிப்புள்ள கஞ்சாவை கடத்தியதாக இரண்டு போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இது குறி... மேலும் பார்க்க