செய்திகள் :

மனதின் குரல் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை!

post image

மனதின் குரல் நிகழ்ச்சியில் யோகா நாள், கோடைக்காலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதன்படி, மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று நடைபெற்ற 120 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் யோகா நாள், நீர் சேமிப்பு, கோடைக்காலம் என்பதால் மாணவர்களுக்கான அறிவுரை குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.

நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்ததாவது, கோடைக்காலங்களில் நீர் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமானது. கோடைக்கால விடுமுறையில் தன்னார்வ சேவைகளில் மாணவ, மாணவிகளை ஈடுபடுத்தும் நிகழ்ச்சிகளுக்கு பள்ளிகள், சேவை அமைப்புகள் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மாணவர்கள், கோடைக்கால விடுமுறையில் தங்களுடைய திறனை மெருகேற்றிக் கொள்வதற்கும், புதிய பொழுதுபோக்கை கற்று கொள்வதற்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

2015, ஜூன் 21 ஆம் தேதியில் முதல் சர்வதேச யோகா நாள் கொண்டாடப்பட்டது. யோகா நாளுக்கு இன்னும் 100-க்கும் குறைவான நாள்களே உள்ளன. 2025 ஆம் ஆண்டுக்கான யோகா நாள், ஒரே பூமி ஒரே ஆரோக்கியத்துக்கான யோகா என்பதை கருப்பொருளாகக் கொண்டுள்ளது.

யோகாவை மூலமாகக் கொண்டு, உலகம் முழுவதையும் ஆரோக்கியம் நிறைந்ததாக மாற்ற விரும்புகிறோம்.

நம்முடைய திருவிழாக்கள் நாட்டில், வேற்றுமையில் ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றன. ஈத், தமிழ்ப் புத்தாண்டு திருநாளைக் கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

மேலும், திருப்பூர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளின் பணிகள் குறித்தும் பிரதமர் மோடி பாராட்டிப் பேசினார்.

இதையும் படிக்க:திருப்பூரைப் பாராட்டிய பிரதமர் மோடி!

வக்ஃப் பெயரில் வாக்கு வங்கி அரசியல்: அமித் ஷா

வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் இஸ்லாமியர்கள் அச்சுறுத்தப்படுவார்கள் என்று எதிர்க்கட்சியினர் வாக்குவங்கி அரசியல் செய்வதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். வக்ஃப் விவகாரங்கள... மேலும் பார்க்க

ஜியோவுக்கு கட்டணம் செலுத்தாத பிஎஸ்என்எல்! அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மத்திய அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015 மே முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்துகொண... மேலும் பார்க்க

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோட்டம்!

ஜார்க்கண்டில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோடிய நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஹுல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சாய்பாச... மேலும் பார்க்க

ராம நவமியன்று 1 லட்சம் பேருக்கு அன்னதானம்: இஸ்கான்

மும்பை: ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதில் முதன்மையானதாக அறியப்படும் இஸ்கான் பிவாண்டி கோயிலில் வரவிருக்கும் ராம நவமி விழாவைக் கொண்டாடச் சிறப்புத் திட்டங்களை வகுத்துள்ளது .இந்தாண்டு ஏப்ரல் 6-ம் தேதி ராம ... மேலும் பார்க்க

பாஜக தலைவர் தேர்வு: மக்களவையில் அகிலேஷ் - அமித் ஷா பேச்சால் கலகலப்பு!

பாஜக தேசிய தலைவர் தேர்வு தொடர்பாக மக்களவையில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இடையே காரசார வாதம் நிகழ்ந்தது.மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா ... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகளால் நாட்டின் தலையெழுத்தே மாறும்: கிரண் ரிஜிஜு

வக்ஃப் வாரிய சொத்துகளை முறையாக நிர்வகித்தால் நாட்டின் தலையெழுத்தையே மாற்ற முடியும் என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்... மேலும் பார்க்க