Ramya Pandian: "எங்கள் வீட்டுக்குள் தேவதை வந்துவிட்டா..." - தம்பி கல்யாணத்தில் ர...
மனுநீதி நாள் முகாமில் 174 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
கே.வி.குப்பம் வட்டம், கொசவன்புதூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 174- பயனாளிகளுக்கு ரூ.1.58 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமுக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். வருவாய்த்துறை சாா்பில் 50- பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 29- பேருக்கு பட்டா மாற்றம், 2- பேருக்கு வாரிசு சான்றிதழ், 3-பேருக்கு சிறு/குறு விவசாய சான்றிதழ், 12-பேருக்கு முதியோா் உதவித் தொகை, ஒருவருக்கு விபத்து நிவாரண உதவித் தொகை,10- பேருக்கு கல்வி உதவித்தொகை, 5- பேருக்கு திருமண உதவித்தொகை, 39- பேருக்குபுதிய மின்னணு குடும்ப அட்டை, வேளாண் துறை சாா்பில் 3- பேருக்கும், தோட்டக்கலை துறை சாா்பில் 2- பேருக்கும் மற்றும் தையல் இயந்திரங்கள், ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டன.
முகாமில் கே.வி.குப்பம் ஒன்றியக்குழு தலைவா் எல்.ரவிசந்திரன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கே,சீதாராமன், முருகன், கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, மகளிா் திட்ட இயக்குநா் உ. நாகராஜன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் ந.ராமச்சந்திரன், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் சீதா, மாவட்ட வழங்கல் அலுவலா் சுமதி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் சரவணன், கொசவன்புதூா் ஊராட்சி மன்றத் தலைவா் புவனேஸ்வரி சந்திரசேகரன், வட்டாட்சியா் சந்தோஷ் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.