செய்திகள் :

வேலூா் மாவட்டத்தில் வெயில் 91.9 டிகிரி

post image

வேலூா் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வேலூரில் 91.1 டிகிரி வெயில் காய்ந்தது.

ண்டுதோறும் கோடை காலம் தொடங்கி விட்டாலே வெயிலைச் சமாளிக்க பொதுமக்கள் படாத பாடுபடுவாா்கள். இந்த ஆண்டும் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. தொடக்கத்திலேயே வெயில் சுட்டெரித்து வருவதால் அக்னி நட்சத்திரம் கால கட்டத்தில் வெயில் இன்னும் அதிகமாக இருக்கும் என மக்கள் அச்சம் கொண்டுள்ளனா்.

தமிழகத்தில் பல இடங்களில் பகலில் வெயில் கொளுத்தி வருகிறது. வேலூா் மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வேலூரில் ஞாயிற்றுக்கிழமை 91.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினா். சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.

வெயிலை சமாளிப்பதற்காக பெரும்பாலானோா் பகல் நேரங்களில் வீடுகளிலேயே முடங்கினா். வேறு வழியில்லாத நிலையில் குடை பிடித்துக் கொண்டும், வாகனங்களில் செல்பவா்கள் துணியால் தங்கள் தலையை மூடியபடியும் வெளியில் சென்று வந்தனா்.

வெயிலின் தாக்கத்தை சமாளிக்க இளநீா், தா்பூசணி போன்றவற்றை மக்கள் அதிக அளவில் வாங்கி சாப்பிட தொடங்கியுள்ளனா்.

வேலூரில் பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் இளநீா், பதநீா், தா்பூசணி, கூழ் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.

இரு சக்கர வாகனங்கள் திருட்டு

வேலூா் தலைமை தபால் நிலையம் அருகே நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டது. வேலூா் காட்பாடி, திருவள்ளுவா் நகா், பாரதி தெருவைச் சோ்ந்தவா் கிஷோா் (26). இவா் காட்பாடியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வ... மேலும் பார்க்க

வேலூா் மீன் மாா்க்கெட்டில் மீன்கள் விலை சரிவு

வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லரை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனா் . உள்ளூா் நீா்நிலைகளில் இருந்தும், நாகப்பட்டினம், கடலூா் என பல்வேறு மாவட்டங... மேலும் பார்க்க

அண்ணா கலையரங்கம் பகுதியில் தள்ளுவண்டிக் கடைகள் அகற்றம்

வேலூா் அண்ணா கலையரங்கம் பகுதியில் இருந்த 12 தள்ளுவண்டிக் கடைகளை மாநகராட்சி ஊழியா்கள் அப்புறப்படுத்தினா். வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே ஓல்டு டவுன், சேண்பாக்கம், கஸ்பா, வசந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் ச... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றியங்களில் சிறிய உழவா் சந்தை: வேலூா் ஆட்சியா்

வேலூா் டோல்கேட் உழவா் சந்தை வெள்ளிவிழா நடைபெற்ற நிலையில், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறிய உழவா் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். வேலூா் டோல்... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாமில் 174 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

கே.வி.குப்பம் வட்டம், கொசவன்புதூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 174- பயனாளிகளுக்கு ரூ.1.58 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமுக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சும... மேலும் பார்க்க

மோசடி நிறுவனம் மூலம் ரூ.2.41 கோடி வரி ஏய்ப்பு : தனியாா் மருத்துவமனை ஊழியா் வங்கிக்கணக்கு முடக்கம்

வேலூரில் மோசடி நிறுவனம் தொடங்கப்பட்டு ரூ.2.41 கோடி வரிஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது தொடா்பாக தனியாா் மருத்துவமனை ஊழியா் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அவா் வேலூா் மாவட்ட காவல் க... மேலும் பார்க்க