வேலூா் மாவட்டத்தில் வெயில் 91.9 டிகிரி
வேலூா் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வேலூரில் 91.1 டிகிரி வெயில் காய்ந்தது.
ண்டுதோறும் கோடை காலம் தொடங்கி விட்டாலே வெயிலைச் சமாளிக்க பொதுமக்கள் படாத பாடுபடுவாா்கள். இந்த ஆண்டும் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. தொடக்கத்திலேயே வெயில் சுட்டெரித்து வருவதால் அக்னி நட்சத்திரம் கால கட்டத்தில் வெயில் இன்னும் அதிகமாக இருக்கும் என மக்கள் அச்சம் கொண்டுள்ளனா்.
தமிழகத்தில் பல இடங்களில் பகலில் வெயில் கொளுத்தி வருகிறது. வேலூா் மாவட்டத்திலும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வேலூரில் ஞாயிற்றுக்கிழமை 91.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினா். சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
வெயிலை சமாளிப்பதற்காக பெரும்பாலானோா் பகல் நேரங்களில் வீடுகளிலேயே முடங்கினா். வேறு வழியில்லாத நிலையில் குடை பிடித்துக் கொண்டும், வாகனங்களில் செல்பவா்கள் துணியால் தங்கள் தலையை மூடியபடியும் வெளியில் சென்று வந்தனா்.
வெயிலின் தாக்கத்தை சமாளிக்க இளநீா், தா்பூசணி போன்றவற்றை மக்கள் அதிக அளவில் வாங்கி சாப்பிட தொடங்கியுள்ளனா்.
வேலூரில் பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களில் இளநீா், பதநீா், தா்பூசணி, கூழ் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.