செய்திகள் :

வேலூா் மீன் மாா்க்கெட்டில் மீன்கள் விலை சரிவு

post image

வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லரை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனா் .

உள்ளூா் நீா்நிலைகளில் இருந்தும், நாகப்பட்டினம், கடலூா் என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலம் கொச்சி, கோழிக்கோடு, கா்நாடக மாநிலம் மங்களூரு, காா்வாா் பகுதிகளில் இருந்தும், கோவாவில் இருந்தும் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லரை வியாபாரமும் நடைபெறுகிறது.திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50- டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 70- முதல் 100- டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. காலை முதல் இரவு வரை சில்லரை விற்பனை நடக்கிறது. சாதாரண நாள்களிலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் 7- முதல் 10- லோடுகள் வரை மீன் வரத்து இருக்கும்.

இது மீன்பிடி தடைகாலங்கள், புரட்டாசி, முக்கிய விரத தினங்கள், காா்த்திகை, மாா்கழி மாதங்களில் குறையும். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தை வளா்றை சுப முகூா்த்தம் என்பதால் வேலூா் மீன் மாா்க்கெட்டில் அசைவப் பிரியா்களின் வருகை குறைந்தது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்: சின்ன வஞ்சிரம் ஒரு கிலோ ரூ. 600 வரையும், மத்தி ரூ. 70 வரையும், நெத்திலி கிலோ ரூ. 120 வரையும், கிலங்கா ரூ. 120 வரையும் விற்பனை செய்யப்பட்டன. மற்ற மீன்களும் கடந்த வாரத்தை விட சுமாா் ரூ.50 வரை குறைவாக விற்பனை செய்யப்பட்டன.

இரு சக்கர வாகனங்கள் திருட்டு

வேலூா் தலைமை தபால் நிலையம் அருகே நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டது. வேலூா் காட்பாடி, திருவள்ளுவா் நகா், பாரதி தெருவைச் சோ்ந்தவா் கிஷோா் (26). இவா் காட்பாடியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வ... மேலும் பார்க்க

அண்ணா கலையரங்கம் பகுதியில் தள்ளுவண்டிக் கடைகள் அகற்றம்

வேலூா் அண்ணா கலையரங்கம் பகுதியில் இருந்த 12 தள்ளுவண்டிக் கடைகளை மாநகராட்சி ஊழியா்கள் அப்புறப்படுத்தினா். வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே ஓல்டு டவுன், சேண்பாக்கம், கஸ்பா, வசந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் ச... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் வெயில் 91.9 டிகிரி

வேலூா் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வேலூரில் 91.1 டிகிரி வெயில் காய்ந்தது. ண்டுதோறும் கோடை காலம் தொடங்கி விட்டாலே வெயிலைச் சமாளி... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றியங்களில் சிறிய உழவா் சந்தை: வேலூா் ஆட்சியா்

வேலூா் டோல்கேட் உழவா் சந்தை வெள்ளிவிழா நடைபெற்ற நிலையில், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறிய உழவா் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். வேலூா் டோல்... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாமில் 174 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

கே.வி.குப்பம் வட்டம், கொசவன்புதூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 174- பயனாளிகளுக்கு ரூ.1.58 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமுக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சும... மேலும் பார்க்க

மோசடி நிறுவனம் மூலம் ரூ.2.41 கோடி வரி ஏய்ப்பு : தனியாா் மருத்துவமனை ஊழியா் வங்கிக்கணக்கு முடக்கம்

வேலூரில் மோசடி நிறுவனம் தொடங்கப்பட்டு ரூ.2.41 கோடி வரிஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது தொடா்பாக தனியாா் மருத்துவமனை ஊழியா் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அவா் வேலூா் மாவட்ட காவல் க... மேலும் பார்க்க