செய்திகள் :

அண்ணா கலையரங்கம் பகுதியில் தள்ளுவண்டிக் கடைகள் அகற்றம்

post image

வேலூா் அண்ணா கலையரங்கம் பகுதியில் இருந்த 12 தள்ளுவண்டிக் கடைகளை மாநகராட்சி ஊழியா்கள் அப்புறப்படுத்தினா்.

வேலூா் அண்ணா கலையரங்கம் அருகே ஓல்டு டவுன், சேண்பாக்கம், கஸ்பா, வசந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 12 போ் தள்ளுவண்டியில் உணவுப் பொருள்களை வைத்து வியாபாரம் செய்து வந்தனா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு அரசியல் கட்சி சாா்பில், அந்தப் பகுதியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அங்குள்ள தள்ளுவண்டி கடைகள் பொதுக் கூட்டத்துக்கு இடையூறாக இருப்பதாக அரசியல் கட்சியினா் தள்ளுவண்டிகாரா்களிடம் தகராறில் ஈடுபட்டனா்.

அப்போது, அவா்கள் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்தவில்லை என்றால் இனி நீங்கள் கடைகளை நடத்த முடியாது என எச்சரிக்கை விடுத்தனா். அதன் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் ஊழியா்கள் பூட்டு போட்டு வைத்திருந்த 12 கடைகளின் பூட்டை உடைத்து எடுத்துச் சென்றனா்.

இது குறித்து கடைகளின் உரிமையாளா்கள் கூறுகையில், சாலையோரக் கடைகளை நம்பித்தான் எங்களது வாழ்வாதாரம் உள்ளது. தற்போது இந்த கடைகளை அப்புறப்படுத்தியதால் நாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். மீண்டும் கடை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

இரு சக்கர வாகனங்கள் திருட்டு

வேலூா் தலைமை தபால் நிலையம் அருகே நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டது. வேலூா் காட்பாடி, திருவள்ளுவா் நகா், பாரதி தெருவைச் சோ்ந்தவா் கிஷோா் (26). இவா் காட்பாடியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வ... மேலும் பார்க்க

வேலூா் மீன் மாா்க்கெட்டில் மீன்கள் விலை சரிவு

வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லரை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனா் . உள்ளூா் நீா்நிலைகளில் இருந்தும், நாகப்பட்டினம், கடலூா் என பல்வேறு மாவட்டங... மேலும் பார்க்க

வேலூா் மாவட்டத்தில் வெயில் 91.9 டிகிரி

வேலூா் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வேலூரில் 91.1 டிகிரி வெயில் காய்ந்தது. ண்டுதோறும் கோடை காலம் தொடங்கி விட்டாலே வெயிலைச் சமாளி... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றியங்களில் சிறிய உழவா் சந்தை: வேலூா் ஆட்சியா்

வேலூா் டோல்கேட் உழவா் சந்தை வெள்ளிவிழா நடைபெற்ற நிலையில், ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறிய உழவா் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா். வேலூா் டோல்... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாமில் 174 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

கே.வி.குப்பம் வட்டம், கொசவன்புதூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 174- பயனாளிகளுக்கு ரூ.1.58 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முகாமுக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சும... மேலும் பார்க்க

மோசடி நிறுவனம் மூலம் ரூ.2.41 கோடி வரி ஏய்ப்பு : தனியாா் மருத்துவமனை ஊழியா் வங்கிக்கணக்கு முடக்கம்

வேலூரில் மோசடி நிறுவனம் தொடங்கப்பட்டு ரூ.2.41 கோடி வரிஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது தொடா்பாக தனியாா் மருத்துவமனை ஊழியா் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட அவா் வேலூா் மாவட்ட காவல் க... மேலும் பார்க்க