செய்திகள் :

மனைவியை சமாளிப்பது எப்படி? கபிங்காவிடம் கேளுங்கள்!

post image

ஒரே ஒரு மனைவியை சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் நண்பர்களிடமும் கூகுளிலும் உபாயங்கள் தேடிக்கொண்டிருப்பவர்கள், தான்சானியாவைச் சேர்ந்த கபிங்காவைப் பற்றி நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

கபிங்கா சப்தமே இல்லாமல், தன்னுடைய 20 மனைவிகள், 104 பிள்ளைகளுடனும், 144 பேரக் குழந்தைகளுடனும் ஒரு சிறு கிராமத்தில் மிகவும் அமைதியாக, நிம்மதியாக, மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

ஒவ்வொரு மனைவிக்கும் தனித்தனி வீடுகள் கட்டி வாழ்ந்து வருகிறார் கபிங்க. இவரது குடும்பமே ஒரு கிராமம் போல அழகாக இருக்குமாம். இவரது மனைவிகளில் சிலர் சகோதரிகளாகவும் இருக்கிறார்கள்.

இவரது மனைவிகளில் ஒருவர் கூறுகையில், தங்களது வாழ்முறை பற்றி தனது குடும்பத்துடன் பேசும்போது, எனது தங்கைகளுக்கும், என்னைப் போல வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டு, அவர்களும் கபிங்காவையே திருமணம் செய்துகொண்டதாகவும் கூறுகிறார்.

அண்மையில், அஃப்ரிமேக்ஸ் என்ற ஊடகத்தில், கபிங்காவின் நேர்காணல் ஒன்று வெளியானதன் மூலம்தான், இவரது மிக எளிய வாழ்முறை உலக வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போது இவரைப் பற்றிய தகவல்கள் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகியிருக்கிறது.

இவர் அஃப்ரிமேக்ஸ் ஊடகத்தில் அளித்த நேர்காணலில், தனது வாழ்க்கை மற்ற அனைவரையும் போலத்தான் தொடங்கியது. கடந்த 1961ஆம் ஆண்டு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு, அடுத்த ஆண்டே முதல் குழந்தைக்கு தந்தையானேன். அப்போதுதான், எனது தந்தை, கிராமத்தில் மக்கள் தொகை குறைவதை சுட்டிக்காட்டி மேலும் ஒரு பெண்ணை திருமணம் செய்து அதிகக் குழந்தைகள் பெற்றுக்கொள்ளுமாறு கூறினார்.

தந்தையின் சொல்படி, தான் அதிக பெண்களை மணந்து குழந்தைகள் பெற்றெடுத்ததாகவும், தனது முதல் ஐந்து மனைவிகளுக்கும், தனது தந்தைதான் வரதட்சிணை பணத்தைக் கொடுத்து திருமணம் செய்துவைத்ததாகவும் குறிப்பிடுகிறார்.

எப்படி நான் குடும்பத்தை நடத்துகிறேன் என்று மக்கள் பேசிக்கொள்வார்கள். நான்தான் அனைவரையும் கட்டுப்பாட்டுடன் வழிநடத்துகிறேன் என்று கூறுகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல, எனது மனைவிகள்தான், ஒற்றுமையுடன் குடும்பத்தை நடத்துகிறார்கள். நான் வெறுமனே அவர்களுக்கு வழிகாட்டுவேன், அவ்வளவுதான் என்று கூறியிருக்கிறார்.

தற்போது கபிங்காவின் 20 மனைவிகளில் 16 மனைவிகள் மட்டுமே உயிருடன் இருக்கிறார்கள். இவரது 40 குழந்தைகள் பல்வேறு உடல் நலக் குறைவால் உயிரிழந்தவிட்டதாகவும், உயிரோடு இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளில் வெறும் 50 பிள்ளைகளின் பெயர்தான் நினைவில் இருக்கும், மற்ற பிள்ளைகளைப் பார்க்கும்போதுதான் அவர்கள் பெயர்நினைவுக்கு வரும் என்கிறாராம் சிரித்தபடி.

இது போர் நடவடிக்கை: டிரம்ப் வரி விதிப்பு குறித்து வாரன் பஃபெட் கருத்து

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு ஒரு வகையில் போர் நடவடிக்கைதான் என அமெரிக்க தொழிலதிபரும் முதலீட்டாளருமான வாரன் பஃபெட் கருத்து தெரிவித்துள்ளார். தற்போது உலகின் மிகவும் சுவாரசியமான பாடமாக... மேலும் பார்க்க

நேபாளத்தில் போதைப்பொருள் கடத்திய 3 இந்தியர்கள் கைது!

நேபாளத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தியாவைச் சேர்ந்த 3 பேர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்காக நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.தெற்கு நேபாளத்தின் ஜித... மேலும் பார்க்க

ராணுவ பட்ஜெட்டை உயர்த்தும் சீனா!

பாதுகாப்பு மற்றும் பலத்தின் மூலமாகவே அமைதியை நிலைநாட்டமுடியும் என்று தெரிவித்துள்ள சீனா ராணுவ பட்ஜெட்டை இந்தாண்டு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சீனா தனது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்... மேலும் பார்க்க

ஐரோப்பிய தளங்களிலிருந்து தங்கள் ராணுவத்தைத் திருப்பி அழைக்க அமெரிக்கா திட்டம்?

அமெரிக்கா தனது ராணுவத்தை ஐரோப்பியத் தளங்களிலிருந்து திரும்பப் பெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டில் 20,000-க்கும் மேற்பட்ட அமெர... மேலும் பார்க்க

போப் உடல்நிலையில் பின்னடைவு!

ரோம் : போப் பிரான்சிஸ் உடல்நிலை குறித்து வாடிகன் வெளியிட்டுள்ள புதிய தகவலின்படி, அவருக்கு மீண்டும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.போப் பிரான்சிஸ்(88) முச்ச... மேலும் பார்க்க

சூடான்: 221 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த ராணுவ வீரர்கள்!

சூடானில் கடந்த ஓராண்டில் மட்டும் ஆயுதப் படையினரால் 221 குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக ஐ.நா.வுக்கான குழந்தைகள் நிறுவனம் செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.வட ஆப்பிரிக்க நாடுகளி... மேலும் பார்க்க