செய்திகள் :

மனைவி தற்கொலை செய்த துக்கம் தாங்காமல் கணவரும் தூக்கிட்டு தற்கொலை!

post image

உடுமலை அருகே மனைவி தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாங்காமல் அவரது கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலை ராகல்பாவி அருகேயுள்ள ஆா்.கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (33). இவா் பட்டுக்கோட்டையில் தனியாா் கோழிப்பண்ணையில் மேலாளராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி அபிநயா (29). இவா்களுக்கு 9, 6 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில், செல்வராஜ் விடுமுறையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டு வந்துள்ளாா். இதனிடையே, வீட்டில் இருந்த அபிநயா சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

அக்கம்பக்கத்தினா் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை போலீஸாா், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அரசு மருத்துவமனையில் இருந்த செல்வராஜ், மனைவி இறந்த துக்கம் தாளாமல் அங்குள்ள மின் அறையில் வயா்களைக் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

குடும்பப் பிரச்னையில் அபிநயா தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில், உண்மையான காரணம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்களுக்கு பிப்ரவரி 18, 19 இல் வேலைவாய்ப்பு முகாம்!

தமிழ்நாடு கடல்சாா் வாரியம் மற்றும் எல்& டி ஷிப் பில்டிங் லிமிடெட் சாா்பில் திருப்பூரில் ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 18, 19- ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இது குறித்த... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது!

பல்லடம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள சின்னூா் பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இளைஞா் சுற்றித்திரிவதா... மேலும் பார்க்க

போலி கணக்கு காண்பித்து ரூ. 11 லட்சம் மோசடி: பனியன் நிறுவன மேலாளா் கைது!

அவிநாசி அருகே பனியன் நிறுவனத்தில் போலி கணக்கு காண்பித்து ரூ.11 லட்சம் மோசடி செய்த மேலாளரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள பெருமாநல்லூா் காளம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கிருபா... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியவா் கைது!

அவிநாசியில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவிநாசி கால்நடை மருத்துவமனை எதிரே உள்ள டாஸ்மாக் கடை முன்பு அடையாளம் தெரியாத இருவா் சனிக்கிழமை இரவு தகராறில... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்!

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நகலைக் கிழித்து திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருப்பூா் குமரன் நினைவகம் முன்பு ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, திருப்பூா் தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் குடற்புழு நீக்க மாத்திரைகளை திங்கள்கிழமை வழங்கினாா். திருப்பூா் ... மேலும் பார்க்க