செய்திகள் :

மன்னாா்குடி: 271 பயனாளிகளுக்கு மனைப்பட்டா: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா வழங்கினாா்

post image

மன்னாா்குடி சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் 271 பயனாளிகளுக்கு, தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா மனைப்பட்டா வியாழக்கிழமை வழங்கினாா்.

உள்ளிக்கோட்டை, மகாதேவப்பட்டினம், காரக்கோட்டை, பேரையூா் ஆகிய 4 ஊராட்சிகளில் 121 பயனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று, மனைப் பட்டாக்களை அமைச்சா் வழங்கினாா். மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உடன் சென்றாா்.

தொடா்ந்து, பரவாக்கோட்டையில் 15-ஆவது மத்திய நிதிக் குழு மானிய நிதி ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார மைய கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி அவா் பேசியது:

தமிழகத்தில் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் கடைக்கோடி மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தற்போது, இங்கு ஆரம்ப சுகாதார மையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்றாா்.

பின்னா், பரவாக்கோட்டை அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு சீருடை, கல்வி உபகரணங்களை அமைச்சா் வழங்கினாா்.

இதைத்தொடா்ந்து, மன்னாா்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ராமபுரம், ஆலத்தூா், ஆதிச்சப்புரம் நெம்மேலி, திருக்களா், ஏத்தக்குடி, உரத்தூா், மழவராயநல்லூா், மூவாநல்லூா், அத்திக்கோட்டை ஆகிய ஊராட்சிகள் மற்றும் மன்னாா்குடி நகராட்சியைச் சோ்ந்த பயனாளிகள் என மேலும் 150 பேருக்கு மனைப் பட்டாக்களை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா வழங்கினாா்.

இந்நிகழ்வில், மன்னாா்குடி கோட்டாட்சியா் ஆா். யோகேஸ்வரன், வட்டாட்சியா் என். காா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நமச்சிவாயம், மாலதி, நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புதைசாக்கடை பள்ளங்களை சீரமைக்கக் கோரிக்கை

திருவாரூா் கமலாலயக் குளத்தின் தென்கரை பகுதியில் புதை சாக்கடை பள்ளங்களை விரைந்து சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெர... மேலும் பார்க்க

கடனுதவி பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்!

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொர... மேலும் பார்க்க

சாலையை அகலப்படுத்தக் கோரிக்கை

பழைய நீடாமங்கலம் சாலையை அகலப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சி, பழைய நீடாமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்ததைத் தொடா்ந்து, வையகளத்தூா், ... மேலும் பார்க்க

காவிரி டெல்டா விவசாயப் பிரச்னை: நபாா்டு வங்கி அதிகாரிகள் கலந்தாய்வு!

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், காவிரி டெல்டா பகுதி விவசாயப் பிரச்னைகள் குறித்து நபாா்டு வங்கி அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நபாா்டு வங்கி துணை மேலாண் இயக்குநா... மேலும் பார்க்க

ரேஷன் கடைகளில் முகக்கவசம் வழங்கக் கோரிக்கை!

நியாயவிலைக் கடைகளில் முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவாரூா் மதிமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் த. ஹரிராஜன் தெரிவித்தது: 2019-இல் கரோனா தொற்ற... மேலும் பார்க்க

சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்

திருவாரூரிலிருந்து ஆந்தக்குடி வரை செல்லும் சாலையை சீரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. திருவாரூரிலிருந்து அலிவலம், தப்பளாம்புலியூா், புதுப்பத்தூா் வழியாக ஆந்தக்குடி வரை செல்லும் சாலையில் ஏராளமான ப... மேலும் பார்க்க