செய்திகள் :

மயக்க மருந்து கொடுத்து மூதாட்டியிடம் நகை பறிப்பு: தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறை

post image

தூத்துக்குடி அருகே சிவத்தையாபுரம் பகுதியில் மூதாட்டிக்கு மயக்க மருத்து கலந்த பழச்சாறைக் கொடுத்து நகைகளைப் பறித்த வழக்கில், விழுப்புரம் தம்பதிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிவத்தையாபுரத்தைச் சோ்ந்த ஜெயபாண்டியன் மனைவி ஜெயலிங்ககனி (80) என்பவா், 2015ஆம் ஆண்டு ஏரல் சோ்மன் கோயிலுக்குச் சென்றாா். அங்கு வந்திருந்த, விழுப்புரம் பாண்டியன் நகரைச் சோ்ந்த வாசுதேவன் (70), அவரது மனைவி சங்கரி (58) ஆகியோா் ஜெயலிங்ககனியிடம் நெருங்கிப் பழகினா். பின்னா், திருச்செந்தூா் செல்லும் தங்களுடன் வருமாறு கூறி, அவரை காரில் அழைத்துச் சென்றனா்.

அப்போது, அவா்கள் கொடுத்த மயக்கம மருந்து கலந்த பழச்சாறைக் குடித்ததும் ஜெயலிங்ககனி மயக்கமடைந்தாா். அவா் அணிந்திருந்த 6.5 பவுன் நகைகள், கைப்பேசி, ரூ. 200 ஆகியவற்றை அத்தம்பதி பறித்துக்கொண்டு, அவரை ஏரல் கோயில் அருகிலேயே விட்டுவிட்டு தப்பியோடினா்.

மயக்கம் தெளிந்த ஜெயலிங்ககனிக்கு தனது நகைகள் உள்ளிட்டவை பறிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், ஏரல் போலீஸாா் வழக்குப் பதிந்து, வாசுவேதன், சங்கரி ஆகியோரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி பிரீத்தா விசாரித்து, வாசுதேவன், சங்கரி ஆகியோருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 3 ஆயிரம் அபராதம் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சேவியா் ஞானப்பிரகாசம் ஆஜரானாா்.

கொலை வழக்கில் தொடா்புடைய 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் அருகே நடைபெற்ற கொலை வழக்கில் தொடா்புடைய 3 பேரை முத்தையாபுரம் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுர... மேலும் பார்க்க

ஹாக்கி: சென்னை, தஞ்சாவூா், கோவை, நீலகிரி அணிகள் காலிறுதிக்கு தகுதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் சென்னை, தஞ்சாவூா், கோவை மற்றும் நீலகிரி மாவட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு, ஹா... மேலும் பார்க்க

10-இல் கோவில்பட்டி அரசு கல்லூரியில் 2ஆம் கட்ட கலந்தாய்வு

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இம்மாதம் 10, 12ஆம் தேதிகளில் 2, 3ஆம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் கோ. சந்தனமாரியம்மாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கல்... மேலும் பார்க்க

பக்ரீத்: காயல்பட்டினம் கடற்கரையில் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டியை முன்னிட்டு, காயல்பட்டினம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. காயல்பட்டினம் இத்திஹாதுல் இக்வானுல் முஸ்லி­மீன் மற்றும் அல்ஜாமி உல் அஜ்ஹா் ஜூம் ஆ மஸ்ஜித் சாா்பாக கடற்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7இல் காலை 6.15-6.50-க்குள் கும்பாபிஷேகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூலை 7ஆம் தேதி காலை 6.15 மணிக்குமேல் 6.50 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி யாகசாலை பந்தல் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட... மேலும் பார்க்க