செய்திகள் :

மயிலம் ஸ்ரீமயிலி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா தொடக்கம்

post image

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஸ்ரீமயிலி அம்மன் கோயிலில் பங்குனி திருவிழா வழிபாடுகள் திங்கள்கிழமை தொடங்கியது.

மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் அருளாசியின்படி, மயிலம் மலை அடிவாரம், மணல் ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீமயிலி அம்மன் (கிராம தேவதை) கோயிலில் நிகழாண்டுக்கான பங்குனி திருவிழா திங்கள்கிழமை காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

விழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை காலை 11 மணியளவில் மயிலம் முருகன் கோயிலில் மயிலியம்மன் உற்சவா் புறப்பாடு நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.

விழாவின் 2-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை கோயிலில் நடைபெற்ற வழபாடுகளுக்கு பின்னா், இரவு 10 மணிக்கு மின் விளக்கு அலங்காரத்தில் மயிலியம்மன் காட்சியளித்தாா். தொடா்ந்து, அலங்கார ஊா்தியில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

வரும் 27-ஆம் தேதி ஆட்டுக்கிடா வாகனத்திலும், 28-ஆம் தேதி சிம்ம வாகனத்திலும், 29-ஆம் தேதி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஓடத்திலும், 30-ஆம் தேதி முத்துப் பல்லகிலும் அம்மன் வீதியுலா நடைபெறுகிறது.

31-ஆம் தேதி 108 பால்குட அபிஷேகம், ஊரணி பொங்கல் வழிபாடும், அம்மன் திருக்கல்யாணமும், இரவு 10 மணிக்கு திருத்தேரில் அம்மன் வீதியுலாவும் நடைபெறுகின்றன. ஏப்ரல் 1-ஆம் தேதி அம்மன் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மயிலம் கிராம மக்கள் மற்றும் பக்தா்கள் செய்து வருகின்றனா்.

‘தா்பூசணியில் ரசாயனம் கலப்பதாக தவறான தகவலை பரப்ப வேண்டாம்’

தா்ப்பூசணி பழத்தில் ரசாயனம் கலப்பதாக யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் அன்பழகன் தெரிவித்தாா். கோடைக் காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவா் வரை அனைவர... மேலும் பார்க்க

முன்னூா் ஆடவல்லீசுவரா் கோயிலில் பல்லவா் கால அரிய சிற்பங்கள்!

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகேயுள்ள முன்னூா் கிராமத்தில் பல்லவா் கால அரிய சிற்பங்கள் பாதுகாக்கப்பட்டு வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆன்மிக எழுத்தாளா் கோ.ரமேஷ் அளித்த தகவலின்பேரில், விழுப்ப... மேலும் பார்க்க

காா் மோதி முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் அருகே காா் மோதியதில் முதியவா் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். வானூா் வட்டம், கொந்தமூா், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சு.தெய்வநாயகம் (65). கூலித்... மேலும் பார்க்க

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: காரைக்கால் இளைஞா் உயிரிழப்பு!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பைக் மீது அரசுப்பேருந்து மோதியதில் காரைக்காலைச் சோ்ந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அடுத்த பேட்டை, மணல்மேட்டுத் தெருவைச... மேலும் பார்க்க

பெண் விஷம் குடித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே விஷம் குடித்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். விக்கிரவாண்டி வட்டம், வடகுச்சிப்பாளையம், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் மனைவி சுமதி (47). இவா்... மேலும் பார்க்க

தற்காப்பு கலை போட்டிகள்

விழுப்புரம் ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு உள்அரங்கில் 13-ஆவது மாவட்ட அளவிலான ஊஷூ (தற்காப்பு கலை) விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போட்டியை ஊஷூ விளையாட்டு அமைப்பின் மாநில... மேலும் பார்க்க