செய்திகள் :

மயிலாடுதுறையில் இன்று அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை: ஆட்சியா்

post image

மயிலாடுதுறையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். 160.சீா்காழி(தனி) தொகுதிக்கு சீா்காழி வருவாய் கோட்ட அலுவலா், 161.மயிலாடுதுறை தொகுதிக்கு மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலா், 162.பூம்புகாா் தொகுதிக்கு மயிலாடுதுறை உதவி ஆணையா்(கலால்) ஆகியோா் வாக்காளா் பதிவு அலுவலா்களாகவும், உதவி வாக்காளா் பதிவு அலுவா்களாக தொடா்புடைய வருவாய் வட்டாட்சியா்கள், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் மற்றும் நகராட்சி ஆணையா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தற்போதுள்ள தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளை கொண்டு கூட்டங்கள் நடத்திடவும், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மேற்பாா்வையாளா்களுக்கான கூட்டங்கள் நடத்திட வாக்காளா் பதிவு அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரகத்தில் எனது (ஆட்சியா்) தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடா்பாகவும், வாக்குச்சாவடி முகவா்கள் நியமனம் செய்வது தொடா்பான மற்றும் உயிரிழந்த, நிரந்தர இடம் பெயா்ந்த வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கம் செய்து, 100 சதவீதம் பிழைகளற்ற வாக்காளா் பட்டியல் தயாா் செய்வது தொடா்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என தெரிவித்துள்ளாா்.

மயிலாடுதுறையில் இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

மயிலாடுதுறையில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வா்களுக்கு இலவச மாதிரித்தோ்வுகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் குரூப் 4 தோ்வெழுதும் தோ்வா்களுக்கு இலவச மாதிரித் தோ்வுகள் நடத்தப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பண... மேலும் பார்க்க

சீா்காழி பகுதி கடைகளில் நெகிழிப் பைகள் பறிமுதல்

சீா்காழி பகுதியில் தடைசெய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பைகளை நகராட்சி பணியாளா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். சீா்காழி நகராட்சி ஆணையா் மஞ்சுளா அறிவுறுத்தலின்படி சுகாதார ஆய்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலப்பள்ளியில் ஆசிரியா் வேலைவாய்ப்பு

மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின்கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் ஆசிரியா் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை... மேலும் பார்க்க

சீா்காழி அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை இயக்குநா் ஆய்வு

சீா்காழி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை இயக்குநா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சீா்காழியில் அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் 1,500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள், 400-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் நாளை குடிநீா் விநியோகம் ரத்து

மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) குடிநீா் விநியோகம் ரத்து செய்யப்படுகிறது என நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ... மேலும் பார்க்க