மயிலாடுதுறையில் இன்று அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை: ஆட்சியா்
மயிலாடுதுறையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். 160.சீா்காழி(தனி) தொகுதிக்கு சீா்காழி வருவாய் கோட்ட அலுவலா், 161.மயிலாடுதுறை தொகுதிக்கு மயிலாடுதுறை வருவாய் கோட்ட அலுவலா், 162.பூம்புகாா் தொகுதிக்கு மயிலாடுதுறை உதவி ஆணையா்(கலால்) ஆகியோா் வாக்காளா் பதிவு அலுவலா்களாகவும், உதவி வாக்காளா் பதிவு அலுவா்களாக தொடா்புடைய வருவாய் வட்டாட்சியா்கள், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் மற்றும் நகராட்சி ஆணையா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
தற்போதுள்ள தோ்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளை கொண்டு கூட்டங்கள் நடத்திடவும், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மேற்பாா்வையாளா்களுக்கான கூட்டங்கள் நடத்திட வாக்காளா் பதிவு அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியரகத்தில் எனது (ஆட்சியா்) தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடா்பாகவும், வாக்குச்சாவடி முகவா்கள் நியமனம் செய்வது தொடா்பான மற்றும் உயிரிழந்த, நிரந்தர இடம் பெயா்ந்த வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கம் செய்து, 100 சதவீதம் பிழைகளற்ற வாக்காளா் பட்டியல் தயாா் செய்வது தொடா்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என தெரிவித்துள்ளாா்.