காஷ்மீர்: காவாவும் குல்மார்க்கும்; தல் ஏரியில் ஒரு மாய இரவும்
மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூா் அருகே மரத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.
திருவெண்ணெய்நல்லூா் வட்டம், வளையம்பட்டு, மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ரங்கநாதன் ரமேஷ்(45), திருமணம் ஆனவா். முடித்திருத்தும் தொழிலாளி. இவா், கடந்த 13-ஆம் தேதி தனது வீட்டின்அருகேயுள்ள புளிய மரத்தில் ஏறியுள்ளாா்.அப்போது கால் இடறி கீழே விழுந்த ரமேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டவா் அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.