செய்திகள் :

`மராத்தியத்தின் இந்தி எதிர்ப்பு சூறாவளி உற்சாகம் தருகிறது..!' - முதல்வர் ஸ்டாலின்

post image

மராத்திய மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இந்தியை கட்டாய மூன்றாவது மொழிப்பாடமாக அறிவித்து உத்தரவிட்டது தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு.

இதற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தின.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியும், ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியும் இணைந்து இந்தி திணிப்புக்கு எதிராக மும்பையில் மிகப் பெரிய பேரணியை நடத்துவோம் என அறிவித்தனர்.

Raj Thackery - Uddhav Thackery

சிவசேனா கட்சியிலிருந்து ராஜ் தாக்கரே பிரிந்து சென்ற 20 ஆண்டுகளாக இருவரும் இணையாத சூழலில், இந்த பிரச்னையில் இருவரும் இணைந்து குரல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து பாஜக அரசு உத்தரவை திரும்பப் பெற்றது.

இன்று மராத்தி ஒற்றுமையின் வெற்றி என்ற மாநாட்டில் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இணைந்து கலந்துகொண்டனர்.

இந்த சம்பவங்களை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மராத்தியத்தின் இந்தி எதிர்ப்பு சூறாவளி உற்சாகம் தருவதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் பதிவு

இந்தித் திணிப்பை முறியடிக்க திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக இந்தியைக் கற்பித்தால்தான் நிதியை ஒதுக்குவோம் என்று சட்டத்துக்குப் புறம்பாகவும் அராஜகமாகவும் நடந்துகொள்ளும் பாஜக, தாங்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிராவில் மக்கள் எழுச்சிக்கு அஞ்சி இரண்டாம் முறையாகப் பின்வாங்கி இருக்கிறார்கள்.

MK Stalin
MK Stalin

இந்தித் திணிப்புக்கு எதிராகச் சகோதரர் உத்தவ் தாக்ரே தலைமையில் இன்று மும்பையில் நடந்த வெற்றிக் கொண்டாட்டப் பேரணியின் எழுச்சியும், உரை வீச்சும் மிகுந்த உற்சாகம் தருகிறது.

"உத்தர பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் கற்பிக்கப்படும் மூன்றாம் மொழி என்ன?" என்றும், "இந்தி பேசும் மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன - இந்தி பேசாத முன்னேறிய மாநிலங்களின் மக்கள் மீது ஏன் இந்தியைத் திணிக்கிறீர்கள்?" என்றும் ராஜ் தாக்ரே அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, இந்தியையும் சமஸ்கிருதத்தையும் வளர்ப்பதையே முழுநேர முன்னுரிமையாக வைத்திருக்கிற ஒன்றிய அரசிடம் எந்த பதிலும் இருக்காது என்பதை நன்றாக அறிவேன்.

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி - சமஸ்கிருதத்தைத் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஒருங்கிணைந்த கல்வித் திட்ட (சமக்ர சிக்‌ஷா அபியான்) நிதி ரூ.2,152 கோடியை விடுவிப்போம் என்று தமிழ்நாட்டைப் பழிவாங்கும் போக்கை ஒன்றிய அரசு மாற்றிக் கொள்ளுமா? தமிழ்நாட்டுப் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காகச் சட்டப்பூர்வமாக வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்குமா?

இந்தி ஆதிக்கத்துக்கு எதிராகத் தமிழ்நாட்டு மக்கள் நடத்திவரும் போராட்டம் உணர்வுமயமானது மட்டுமல்ல, அறிவுப்பூர்வமானது! தர்க்கப்பூர்வமானது! இந்தியாவின் பன்மைக் கலாசாரத்தை பாதுகாப்பதற்கானது! வெறுப்பின்பாற்பட்டது அல்ல!

இந்தித் திணிப்பால் ஏராளமான இந்திய மொழிகள் அழிந்த வரலாற்றை அறியாமலும், இந்தியாவை இந்தி நாடாக்கும் செயல்திட்டத்தைப் புரிந்துகொள்ளாமலும், "இந்தி படித்தால் வேலை கிடைக்கும்" என்ற பசப்பு வார்த்தைகளைக் கிளிப்பிள்ளைகளைப் போல ஒப்பித்துக் கொண்டிருக்கும் இங்குள்ள அப்பாவிகள் சிலர், இனியாவது திருந்த வேண்டும். மராட்டியத்தின் எழுச்சி அவர்களின் அறிவுக் கண்களைத் திறக்கும்!

தமிழுக்கு நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை, கீழடி நாகரிகத்தை அங்கீகரிக்க மறுக்கும் ஆணவம் நீடிக்க விட மாட்டோம். தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பாஜக செய்துவரும் துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேட வேண்டும். இல்லையேல், அவர்களுக்கும் அவர்களது புதிய கூட்டாளிகளுக்கும் தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்!

Reuters: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முடக்கம்; காரணம் என்ன?

Reuters - இது பிரபலமான சர்வதேச செய்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் இந்தியாவின் எக்ஸ் பக்கம் தற்போது முடக்கப்பட்டுள்ளது. இது, 'சட்டப்பூர்வமான கோரிக்கை' என்கிற அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. ஆனால்... மேலும் பார்க்க

'வன்னியர் சமுதாய மக்களும், பட்டியிலின மக்களும் இணைந்தால்..!' - ஆட்சி அமைப்பது குறித்து அன்புமணி

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். அதில் பாமக தலைவர் ... மேலும் பார்க்க

இன்று 90 வயதைத் தொடும் தலாய் லாமா! - அடுத்த தலாய் லாமா தேர்வும், சீனா நகர்த்தும் காய்களும்|Explained

'அடுத்த தலாய் லாமா தேர்ந்தெடுக்கப்படுவாரா?' என்கிற கேள்விக்கு பதில், கடந்த 2-ம் தேதி, தலாய் லாமாவின் எக்ஸ் பக்கத்தில் அறிக்கையாக வெளிவந்தது. இந்த அறிக்கை, இந்த ஆண்டு மே மாதம் 21-ம் தேதி தலாய் லாமாவால்... மேலும் பார்க்க

``அதிமுக எதிரி தான் என விஜய் அறுதியிட்டு கூறவில்லை; அங்கே தான் கேள்வி எழுகிறது!” - தொல்.திருமாவளவன்

திருச்சியில், தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "கச்சத்தீவை விட்டு தர மாட்டேன் என இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளது பற்றி கேட்கிறீர்கள். கச்சத்தீவு இந்தியாவுக்கு... மேலும் பார்க்க

ராணுவம்: வானில் அச்சுறுத்தும் சீனாவின் 'செயற்கைகோள் படை' - எப்படி எதிர்கொள்ளும் இந்தியா?

Lசீனாவின் விண்வெளி ராணுவத் தொழில்நுட்பம் உலக நாடுகளை அச்சுறுத்தத் தொடங்கியிருக்கிறது. ஆர்பிட்டில் ஆதிக்கம் செலுத்தும் ராணுவ செயற்கை கோள்களை எதிர்கொள்வது இந்தியாவுக்கு சவாலானதாக இருக்கும்.தாக்குதல் நடத... மேலும் பார்க்க

America Party: புதிய கட்சியைத் தொடங்கினார் எலான் மஸ்க் - முழு விவரம்!

கடந்த மே மாதத்தின் இறுதியில் இருந்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் ஆகிய இருவரும் முட்டி மோதிக்கொள்கிறார்கள். இதற்கு மிக முக்கிய காரணம், 'ஒன் பிக் அண்ட் பியூ... மேலும் பார்க்க