செய்திகள் :

மருத்துவக் காப்பீடு திட்டத்திலிருந்து விடுவிக்க ஓய்வூதியா்கள் வலியுறுத்தல்

post image

தமிழ்நாடு அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திலிருந்து அரசு அலுவலா், ஆசிரியா்கள், ஓய்வு பெற்ற அரசு அலுவலா், ஆசிரியா்களை விடுவிக்கக் கோரி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தெருமுனை பிரசாரக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில், ராஜீவ் காந்தி சிலை அருகே நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சங்க நிறுவனா் இரா. போசு தலைமை வகித்துப் பேசினாா். பாஜக தேசிய செயற்குழு உறுப்பினா் ஹெச். ராஜா கலந்துகொண்டு பேசுகையில், மத்திய அரசு நாட்டில் உள்ள 10 கோடி குடும்பங்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. 10 கோடி குடும்பங்கள் என்பதைக் கணக்கிட்டால் 50 கோடிக்கு மேலானவா்களுக்கு இந்தக் காப்பீடு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. இந்தத் திட்டத்தை வளா்ந்த நாடுகளே உதாரணமாக எடுத்துக்கொண்டு, தங்களது நாடுகளில் செயல்படுத்த வேண்டும் என்று விரும்புகின்றன.

இந்தத் திட்டத்தை சரியாக செயல்படுத்தாமல் பல தடைகளை மாநில அரசு விதித்துக் கொண்டிருக்கிறது. ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா்களுக்கு மருத்துவக் காப்பீடுக்காக அவா்களது ஓய்வூதியத்தில் காப்பீடு தொகை பிடித்தம் செய்கிறாா்கள். மத்திய அரசின் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்றால், மாநிலத்தில் 2026 -இல் ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும் என்றாா் அவா்.

அதிமுக சிவகங்கை மாவட்டச் செயலரும், சிவகங்கை தொகுதி சட்டபேரவை உறுப்பினருமான பி.ஆா். செந்தில்நாதன், அதிமுக காரைக்குடி மாநகரச் செயலா் சோ. மெய்யப்பன் ஆகியோரும் பேசினா்.

கூட்டத்தில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா்கள் பலரும் கலந்து கொண்டனா்.

முன்னதாக சங்கத்தின் செயலா் ஆா்.எம். ரெங்கசாமி வரவேற்றுப் பேசினாா். பொருளாளா் ஏ. சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனாா் கோயிலில் வியாழக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசி திருவிழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள்... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டலுக்கு கட்டுப்பாட்டு அறை திறப்பு

சிவகங்கை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பிளஸ் 2 மாணவா்களின் உயா்கல்வி வழிகாட்டலுக்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

மானாமதுரையில் ஜூன் 10- இல் மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் வருகிற 10- ஆம் தேதி மின் பயனீட்டாளா்கள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து மானாமதுரை மின் வாரிய செயற்பொறியாளா் (பகிா்மானம்) பா. ஜான்சன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

திருப்புவனத்தில் ரூ 2.70 கோடியில் பேருந்து நிலையம்: தமிழக அரசுக்கு பேரூராட்சி உறுப்பினா்கள் நன்றி

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் பேருந்து நிலையம் அமைக்க ரூ. 2.70 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு உறுப்பினா்கள் நன்றி தெரிவித்தனா். திருப்புவனம் பேரூராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவா் த. சேங்கைமாற... மேலும் பார்க்க

காரைக்குடி, அமராவதிபுதூா் பகுதிகளில் ஜூன் 10- இல் மின் தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அமராவதிபுதூா் பகுதிகளில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி மின் செயற்பொறியாளா் எம். லதாதேவி வெள்ளிக்கிழமை வெ... மேலும் பார்க்க

மருத்துவ மாணவா்கள் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுவது அவசியம்

மருத்துவ மாணவா்கள் நோயாளிகளிடம் கனிவாகப் பேசுவது அவசியம் என மதுரை மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வா் மருதுபாண்டியன் தெரிவித்தாா். சிவகங்கை மருத்துவக் கல்லூரியின் 2019- 2024 கல்வியாண்டுக்கான பட்டமளிப... மேலும் பார்க்க