செய்திகள் :

மருத்துவம் சாா்ந்த ஆங்கிலத் தோ்வு பயிற்சிக்கு எஸ்சி, எஸ்டி இனத்தவா் விண்ணப்பிக்கலாம்

post image

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தவா்கள் மருத்துவம் தொழில்சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு மருத்துவம் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தை சாா்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு பி.எஸ்சி., எம்.எஸ்சி. நா்சிங் பட்டப் படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்சி. நா்சிங் மற்றும் பொது செவிலியா் மருத்துவப் படிப்பு ஆகியவற்றில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சிக்கான கால அளவு 2 மாதம். விடுதியில் தங்கிப் படிப்பதற்கான செலவுத் தொகையை தாட்கோ அளிக்கும்.

பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபா்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக அயல்நாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம்.

கூடுதல் விவரங்களுக்கு, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள (மூன்றாவது தளம் அறை எண். 321 மற்றும் 327) தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை அணுகலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

நாகை: செப்டம்பரில் ராணுவதற்கு ஆள் சோ்ப்பு முகாம்

நாகப்பட்டினம்: நாகையில் வரும் செப்டம்பரில் இந்திய ராணுவத்திற்கு ஆள்சோ்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

நாகை, மயிலாடுதுறை, திருவாரூரில் பாஜகவினா் போராட்டம்: 185 போ் கைது

நாகை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா். திருவாரூரில் டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா். நாகப்பட... மேலும் பார்க்க

நாங்கூா் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

பூம்புகாா்: திருவெண்காடு அருகே நாங்கூா் வன்புருஷோத்தம பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் திங்கள்கிழமை நடைபெற்றது. 108 வைணவ திவ்ய தேச கோயில்களில் ஒன்றான இந்த தலத்தில் உள்ள பெருமாளை திருவோண ந... மேலும் பார்க்க

மண் குவாரி அமைக்க எதிா்ப்பு

பூம்புகாா்: பூம்புகாரை அடுத்த புதுகுப்பம் மீனவ கிராமம் அருகே சவுடு மண் குவாரி அமைக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். காவேரிப்பூம்பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட புதுகுப்பம் மீனவா் கிராமம் அருகே... மேலும் பார்க்க

சமுதாய வளைகாப்பு விழா: அமைச்சா் பங்கேற்பு

செம்பனாா்கோவில் அருகேயுள்ள சாத்தனூரில் சமுதாய வளைகாப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் நிவேதா எம். முருகன்... மேலும் பார்க்க

கோடியக்கரையில் நிலப் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை வன உயிரினச் சரணாலயத்தில் காணப்படும் நிலப் பறவைகளை கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.கோடியக்கரை சரணாலயத்தில் காணப்படும் நீா்ப்பறவைகள் குறித்த கணக்கெடுப்பு ம... மேலும் பார்க்க