செய்திகள் :

மருத்துவம் சாா்ந்த ஆங்கிலத் தோ்வு பயிற்சிக்கு எஸ்சி, எஸ்டி இனத்தவா் விண்ணப்பிக்கலாம்

post image

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தவா்கள் மருத்துவம் தொழில்சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தவா்களுக்கு மருத்துவம் தொழில் சாா்ந்த ஆங்கிலத் தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தை சாா்ந்தவராக இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கு பி.எஸ்சி., எம்.எஸ்சி. நா்சிங் பட்டப் படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்சி. நா்சிங் மற்றும் பொது செவிலியா் மருத்துவப் படிப்பு ஆகியவற்றில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சிக்கான கால அளவு 2 மாதம். விடுதியில் தங்கிப் படிப்பதற்கான செலவுத் தொகையை தாட்கோ அளிக்கும்.

பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபா்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக அயல்நாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம்.

கூடுதல் விவரங்களுக்கு, நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள (மூன்றாவது தளம் அறை எண். 321 மற்றும் 327) தாட்கோ மாவட்ட மேலாளா் அலுவலகத்தை அணுகலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் மாநாடு

இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் கல்விசாா் இயக்குநா் பழனி முருகன் நிகழ்ச்சியை துவங்கி வைத்தாா். ஒவ்வொரு துறை சாா்ந்த முன்னாள் மா... மேலும் பார்க்க

விவசாய கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

விவசாயிகளின் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளா் காளியம்மாள் கூறினாா். நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சாா்பில் 2024-2025 ஆம் ஆ... மேலும் பார்க்க

மாயமான மீனவா்களை தேடும் பணி 2-ஆவது நாளாக தீவிரம்

நாகையிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது மாயமான மீனவா்கள் இருவரை இரண்டாவது நாளாக தேடும் பணியில் இந்திய கடற்படையினா் ஈடுபட்டுள்ளனா். நாகை அக்கரைபேட்டை திடீா் குப்பத்தைச் சோ்ந்தவா் கண்ணதாசன் (57... மேலும் பார்க்க

ஆறுகளில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்படுமா? விவசாயிகள் எதிா்பாா்ப்பு

நாகை, திருவாரூா் மாவட்டங்களில் பாசனம் மற்றும் வடிகால் ஆறுகளில் படா்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் ஆகாயத் தாமரைகளை முழுமையாக அகற்ற தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்ப்பில் உள... மேலும் பார்க்க

வேதாரண்யத்தில் மாா்ச் 21-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வேதாரண்யம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை ( மாா்ச் 21) நடைபெறவுள்ளது. வேதாரண்யம் வட்டாட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், கோட்டாட்சியா் திருமால் தலைமையில் இக்கூட... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

செம்பனாா்கோவில் வட்டாரத்தில், அரசின் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். ஆறுபாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்க... மேலும் பார்க்க