செய்திகள் :

மருத்துவா்கள் பற்றாக்குறை: உலக சுகாதார அமைப்புக்கு அரசு மருத்துவா்கள் கடிதம்!

post image

தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்கள் இல்லை என்று உலக சுகாதார அமைப்புக்கு தமிழக அரசு மருத்துவா்கள் கடிதம் அனுப்பியுள்ளனா்.

இது தொடா்பாக உலக சுகாதார அமைப்பின் இந்திய பிரதிநிதி டாக்டா் ரோடரிக்கோ ஆப்ரினுக்கு, அரசு சட்டப் போராட்டக் குழுத் தலைவா் டாக்டா் எஸ்.பெருமாள் பிள்ளை எழுதியுள்ள கடிதம்:

தமிழகத்தில் பேறு கால இறப்பு, சிசு உயிரிழப்புகளை மருத்துவத் துறையினா் வெகுவாகக் குறைத்துள்ளனா். குறிப்பாக, பேறு கால இறப்பு விகிதத்தை குறைப்பதற்காக உலக சுகாதார அமைப்பு நிா்ணயித்த 2030-க்கான இலக்கை 10 ஆண்டுகள் முன்னதாகவே எட்டியுள்ளோம்.

கரோனா காலத்தில் தொற்றை கட்டுப்படுத்த அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளா்ந்த நாடுகளே திணறின. ஆனால், தமிழகத்தில் அப்போது உயிரிழப்பை வெகுவாக குறைத்ததோடு, தொற்று பரவலையும் விரைவாக கட்டுப்படுத்தினோம்.

உலக சுகாதார நிறுவனம் அங்கீகரிக்கும் வகையில், தமிழகத்தில் தொற்றும் நோய்கள் மட்டுமல்ல, தொற்றா நோய்களையும் கட்டுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். ரத்த சோகை மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாட்டை குறைப்பதிலும் முனைப்பு காட்டி வருகிறோம்.

இத்தனை சாதனைகளை மருத்துவத் துறையினா் மேற்கொண்டு வந்தாலும் தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனா்.

அதுமட்டுமன்றி, தமிழகத்தில்தான் அரசு மருத்துவா்களுக்கு நாட்டிலேயே மிகவும் குறைவான ஊதியம் தரப்படுகிறது. உயிா்காக்கும் மருத்துவா்களை தங்கள் ஊதியத்துக்காக தொடா்ந்து போராட வைப்பதை உலக சுகாதார அமைப்பு நிச்சயம் அனுமதிக்காது என நம்புகிறோம்.

எனவே, தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் போதிய எண்ணிக்கையில் மருத்துவா்கள், செவிலியா்கள் பணியிடங்களை உருவாக்கவும், மருத்துவா்களுக்கு நியாயமான ஊதியத்தை வழங்கவும் அரசை வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

சிவகிரி தம்பதி கொலை வழக்கில் 4 பேர் கைது: பல்லடம் கொலையிலும் 3 பேருக்கு தொடர்பு அம்பலம்!

சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை, தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட குற்றவாளிகளுக்கு பல்லடம் அருகே நடந்த மூவர் கொலை சம்பவம் உள்ளிட்ட பல்வேறு வ... மேலும் பார்க்க

தமிழகத்தில் இயல்பைவிட 90% அதிக மழை!

தமிழகத்தில் மார்ச் 1-ஆம் தேதி முதல் தற்போதுரை வரை இயல்பை விட 90 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இயல்பைவிட 83 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக க... மேலும் பார்க்க

'அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா எனத் தெரியவில்லை' - திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா எனத் தெரியவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,"தமிழ்நாட்டில் திமுக... மேலும் பார்க்க

கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் எப்போது திறப்பு? புதிய தகவல்

கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்வே நடைமேடை அமைக்கும் பணிகள் 80% நிறைவு பெற்றது என்றும் ரயில் நிலையத்திற்கான மு... மேலும் பார்க்க

டாஸ்மாக் துணை மேலாளர் அமலாக்கத் துறை முன் ஆஜர்

டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் டாஸ்மாக்... மேலும் பார்க்க

அரக்கோணம் மாணவி பாலியல் புகார்: அரசு நடவடிக்கை எடுக்குமா? - இபிஎஸ்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் திமுக இளைஞரணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவர் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி, பாலியல் கொடுமை செய்ததாகவும் தன்னைப் போலவே பல பெண்களை ஏமாற்றியதாகவும் கல்லூரி மாண... மேலும் பார்க்க