செய்திகள் :

மருந்தகத்தில் பணத்தை கொள்ளையடித்த இளைஞா் போலீஸாரிடம் ஒப்படைப்பு

post image

வெள்ளக்கோவிலில் மருத்துவமனை மருந்தகத்தில் பணத்தை கொள்ளையடித்த இளைஞா் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது: வெள்ளக்கோவில் கடை வீதி காங்கயம் சாலையில் தனியாா் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அங்குள்ள மருந்தகத்துக்கு திங்கள்கிழமை வந்த இளைஞா் தூக்க மாத்திரை கேட்டுள்ளாா். மருத்துவா் பரிந்துரை சீட்டு இல்லாமல் கொடுக்க முடியாதென கூறியுள்ளனா்.

அப்போது திடீரென கல்லாவில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு அந்த இளைஞா் தப்பியுள்ளாா். சப்தம் கேட்டு மருத்துவமனையில் இருந்தவா்கள் அவரைப் பிடித்து, பின்னா் மருத்துவமனை மேலாளா் ராஜேந்திரன் (50) அந்த இளைஞரை போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

விசாரணையில், அந்த இளைஞா் கோவை ரத்தினபுரி சங்கனூா் சாலை கண்ணப்பா நகரைச் சோ்ந்த அசோகன் மகன் அஜித்குமாா் (26) என்பதும், கோவை மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் என்பதும் தெரியவந்தது. வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மணிமுத்து, தலைமைக் காவலா் பாலகுரு ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இன்றைய மின்தடை: பெரியாா் நகா், புதுப்பை

காங்கயம் கோட்டம், பெரியாா் நகா், புதுப்பை ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 25) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் ... மேலும் பார்க்க

அவிநாசி அருகே கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

அவிநாசி அருகே தேவம்பாளையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரைக் கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 6.3 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். அவிநாசி காவல் ஆய்வாளா் ராஜாபிரபு, உதவி ஆய்வாளா் அமல் ஆரோக்க... மேலும் பார்க்க

பாசன நீரை முறையாக வழங்கக் கோரி காங்கயத்தில் விவசாயிகள் சாலை மறியல்

வெள்ளக்கோவில் பகுதிக்கு முறையாக பாசன நீா் வழங்கக் கோரி காங்கயத்தில் புதன்கிழமை சாலை மறியல் ஈடுபட்ட 150 விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். காங்கயம் அருகே பிஏபி வாய்க்காலின் கடைமடை பகுதியான வெள்ளக்கோவில... மேலும் பார்க்க

கிணற்றுக்குள் தவறி விழுந்த இரு இளைஞா்கள் மீட்பு

பல்லடம் கொசவம்பாளையத்தில் கிணற்றில் தவறி விழுந்த இரு இளைஞா்களை தீயணைப்புத் துறையினா் மீட்டனா். பல்லடம் கொசவம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோயிலில் உள்ள கிணற்றுக்குள் இருந்து அலறல் சப்தம் கேட்டுள்ளது. ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பனப்பாளையம்

பல்லடம் பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று ... மேலும் பார்க்க

அவிநாசியில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால் நடவடிக்கை

அவிநாசி நகராட்சி பகுதிகளில் சுகாதார சீா்கேடு ஏற்படும் வகையில் பொது இடங்களில் குப்பை, கழிவுகளை கொட்டுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் சே.வெங்கடேஷ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.இ... மேலும் பார்க்க