செய்திகள் :

மறைந்த எழுத்தாளர் எஸ். எல். பைரப்பாவை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி சொன்ன விஷயம்..!

post image

கன்னட எழுத்தாளர் எஸ். எல். பைரப்பா இன்று (செப். 24) காலமானார். அன்னாரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஆழ்ந்த ஞானம் வாய்ந்த ஆளுமையொருவரை நாம் இழந்துவிட்டோம். இந்தியாவின் ஆன்மாவை தொட்டுப்பார்த்தவொருவர் அவர். அச்சம் துளியுமில்லா சிந்தனையாளரான அவர், கன்னட இலக்கியத்தை தமது சிந்தனையைத் தூண்டும் படைப்புகளால் மெருகேற்றியவர்.

அன்னாரது படைப்புகள் தலைமுறைகள் பலவற்றுக்கு உத்வேகமளிக்கும். மேலும், தலைமுறைகள் பல கேள்வி கேட்கவும் சமூகத்துடன் ஆழமாக பங்களிப்புடன் இருக்கவும் அவை உதவும். நமது வரலாறு மற்றும் கலாசாரத்தின் மீதான அன்னாரது ஆர்வம் வருங்கால மக்களுக்கும் உத்வேகமளிக்கும்.

அன்னாரது குடும்பத்துக்கும் அவர் மீதான பற்றாளர்களுக்கும் இத்தருணத்தில் இரங்கலைத் தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க:எழுத்தாளர் எஸ். எல். பைரப்பா காலமானார்!

Narendra Modi condolences to the passing of S. L. Bhyrappa

மறைந்த பாடகர் ஸுபீன் கர்க் மரணத்தில் மர்மம்: சிறப்பு விசாரணைக் குழு அமைத்து உத்தரவு!

மறைந்த பாடகர் ஸுபீன் கர்க் உயிரிழந்த சம்பவம் விபத்து என்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்த முடியாத விதத்தில் அன்னாரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதைத் தொடர்ந்து அதனை விசாரிக்க சிறப... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் 6 நக்சல்கள் சரண்!

மகாராஷ்டிரத்தில், கூட்டாக ரூ.62 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட 6 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். கட்சிரோலி மாவட்டத்தில், கூட்டாக ரூ.62 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ 10, +2 பொதுத் தேர்வுகள் எப்போது தொடங்கும்?

சிபிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது தொடங்கும்? என்பது குறித்த உத்தேச தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, அடுத்தாண்டு பிப்ரவரியில் பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளன.10-ஆம் வகுப்புக்கான ப... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு உதவிய நபர் கைது!

பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கு பயங்கரவாதிகளுக்கு தளவாட உதவிகளை வழங்கிய ஒருவரை ஜம்மு - காஷ்மீர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில் உள்ள வனப் பகுதியில் கடந்... மேலும் பார்க்க

நான்கு வயதில் தேசிய விருது..! கரவொலியால் அதிர்ந்த அரங்கம்! யார் இந்த த்ரிஷா தோசர்?

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நான்கு வயதே ஆன சிறுமி ஒருவர் தன்னுடைய முதல் விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார். யார் அந்த சிறுமி என்பதைப் பற்றி பார்க்கலாம்..தில்லியில் உள்ள விக்ஞான் பவனில்... மேலும் பார்க்க

லடாக்குக்கு மாநில அந்தஸ்து கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை: 4 பேர் பலி!

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்தனர்.கடந்த 2019-இல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் நடவடிக்கையால்... மேலும் பார்க்க