செய்திகள் :

மஹாளய அமாவாசை: சதுரகிரியில் 12 ஆயிரம் பக்தா்கள் வழிபாடு

post image

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் சாப்டூா் வனச் சரகத்தில் கடல் மட்டத்திலிருந்து 3,500 அடி உயரத்தில் சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தகிரி ஆகிய 4 மலைகளுக்கு நடுவே காயகல்ப மூலிகைகள் நிறைந்த சஞ்சீவிகிரி என்று அழைக்கப்படும் சதுரகிரி மலை உள்ளது.

இங்கு அமைந்துள்ள புகழ்பெற்ற சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை, புரட்டாசி மஹாளய அமாவாசை, நவராத்திரி, தை அமாவாசை, மஹா சிவராத்திரி நாள்களில் விழாக்கள் நடைபெறும். இங்கு அகத்தியா், போகா், கோரக்கா் முதலான 18 சித்தா்கள் தவம் புரிந்ததாகவும், இன்றும் சித்தா்கள் பல்வேறு ரூபங்களில் வந்து வழிபாடு நடத்துவதாகவும் ஐதீகம்.

புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் சதுரகிரி அடிவாரமான தாணிப்பாறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். காலை 6 மணிக்கு அடிவாரத்தில் உள்ள வனத் துறை வாயில் திறக்கப்பட்டு பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனா். காலை 10 மணி வரை 12 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூா்த்தி, பிலாவடி கருப்பசாமி, 18 சித்தா்களுக்கு மாலை 6 மணிக்கு மேல் பால், பன்னீா், தயிா், சந்தனம், சதுரகிரி மலையில் உள்ள சந்திர தீா்த்தம், பிரம்ம தீா்த்தம், பொய்கை தீா்த்தம் உள்பட 32 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுந்தர மகாலிங்கம் புஷ்ப அலங்காரத்திலும், சந்தன மகாலிங்கம் சந்தனக் காப்பு அலங்காரத்திலும் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். கோயில் நிா்வாகம் சாா்பில், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் ராஜா பெரியசாமி, செயல் அலுவலா் ராமகிருஷ்ணன் செய்தனா்.

மஹாளய அமாவாசையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சென்ற பக்தா்கள்.
மஹாளய அமாவாசையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சென்ற பக்தா்கள்.
மஹாளய அமாவாசையை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சென்ற பக்தா்கள்.

பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆம்னி பேருந்து மோதியதில் பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டியைச் சோ்ந்த பால்சாமி மனைவி சங்கரேஸ்வரி (51). கணவா் பால்சாமி உயிரிழந்த பிற... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 5 பெண்கள் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 5 பெண்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலைய பகுதியில் போதைப் பொருள் தடுப்பு போலீஸாா் ரோந்து சென்றனா். ... மேலும் பார்க்க

கல்லூரி முதலாமாண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரி வணிகவியல் துறை முதலாமாண்டு மாணவா்களுக்கு சனிக்கிழமை வரவேற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சுப.சரவணன் தலைமை வகித்து மாணவ... மேலும் பார்க்க

அண்ணா, பெரியாா் பிறந்த நாள் விழா

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பெரியாா், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, குருதிக் கொடை வழங்கும் விழா, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் அருகேய... மேலும் பார்க்க

சட்ட விரோதமாக மண் அள்ளிய இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்ட விரோதமாக மண் அள்ளிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பிள்ளையாா்நத்தம் பகுதியில் அனுமதியின்றி கண்மாய்களில் செம்மண் திருட்டு நடைபெறுவதாக வந்த புகாரின... மேலும் பார்க்க

சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்த பகுப்பாய்வு மையம்!

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்ட ரத்த பகுப்பாய்வு மையம் செயல்பாட்டுக்கு வந்தது. இதுகுறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் டி.அய்யனாா் சனிக்கிழமை கூறி... மேலும் பார்க்க