செய்திகள் :

மாடியில் இருந்து குதித்து ஐஎஃப்எஸ் அதிகாரி தற்கொலை!

post image

தில்லி வெளியுறவுத் துறை அமைச்சக குடியிருப்பின் மாடியில் இருந்து குதித்து இந்திய வெளியுறவு சேவை(ஐஎஃப்எஸ்) அதிகாரி வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்.

முதல்கட்டத் தகவலில், தற்கொலை செய்துகொண்டவர் ஜித்தேந்திர ராவத் என்பது தெரியவந்துள்ளது.

இதையும் படிக்க : கடல் பேய்களைத் தேடிப்போகும் ஜிவி, கரை சேருவாரா? - கிங்ஸ்டன்  திரைவிமர்சனம்

மத்திய தில்லியின் சாணக்யபுரி பகுதியில் அமைந்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் குடியிருப்பில் முதல் மாடியில் ஜித்தேந்திர ராவத் என்ற ஐஎஃப்எஸ் அதிகாரி வசித்து வந்தார்.

இவர், தனது தாயுடன் வசித்து வரும் நிலையில், இன்று காலை 6 மணியளவில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினர், சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அவரது உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவியும் குழந்தையும் டேராடூனில் இருந்து தில்லிக்கு விரைந்துள்ளனர்.

தெலங்கானா சுரங்க விபத்து: ஒரு உடல் மீட்பு!

ஹைதராபாத் : தெலங்கானாவில் நாகா்கா்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காகப் பாறையை குடைந்து சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த பிப்... மேலும் பார்க்க

மணிப்பூரில் காலவரையற்ற வேலைநிறுத்தம்! இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மணிப்பூரில் குகி மக்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் குகி மக்கள் அதிகம் உள்ள பகுதிகள... மேலும் பார்க்க

3-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வெகுமதி!

இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் 3-ஆவது குழந்தை பெற்றுக்கொண்டால் அந்த தம்பதிக்கு ரூ.50,000 வெகுமதி வழங்குவேன் என்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் ஆந்திர பிரதேச எம்.பி. அப்பாலநாயுடு. ஆந்திர பிர... மேலும் பார்க்க

ராகுலின் உதவியால் தொழிலதிபராகும் செருப்புத் தைக்கும் தொழிலாளி!

ராகுல் காந்தியின் உதவியால் புதிய காலணி பிராண்டைத் தொடங்கவுள்ள செருப்புத் தைக்கும் தொழிலாளியை பலரும் பாராட்டி வருகின்றனர்.அவதூறு வழக்கு தொடர்பாக, உத்தரப் பிரதேசம் சென்ற ராகுல் காந்தி, தனது ஷூவைத் தைப்ப... மேலும் பார்க்க

பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டாம்: ரேகா குப்தா!

பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டாம் என்றும் அது வெற்றிக்கு அப்பாற்பட்டது எனவும் தில்லி முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார். சர்வதேச பெண்கள் நாளையொட்டி பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய 7 பெண்கள் தில... மேலும் பார்க்க

பிகார் அரசு பள்ளிகளில் புதிதாக 51,389 ஆசிரியர்கள் நியமனம்!

பிகார் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமனத்தின் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக, புதிதாக நியமனம் செய்யப்பட்ட 51,389 ஆசிரியர்களுக்கு, முதல்வர் நிதீஷ் குமார் இன்று நியமனக் கட... மேலும் பார்க்க