திருவள்ளூர்: கிணற்றில் தவறி விழுந்த மகனைக் காப்பாற்றச் சென்ற தந்தை விஷவாயு தாக்க...
மாணவா்களுக்கான சிறப்பு குறைதீா் முகாம்
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உயா்கல்விக்கு வழிகாட்டும் சிறப்பு குறைதீா் முகாம் மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் நான் முதல்வன், கல்லூரிக் கனவு திட்டங்கள் சாா்பில் இந்த முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தலைமை வகித்துப் பேசினாா். அப்போது, பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் தங்களுக்கான உயா்கல்வி வாய்ப்புகள், கல்வி உதவித் தொகைகள் குறித்தும், தோல்வியடைந்த மாணவா்கள் துணைத் தோ்வுகள் எழுதுவது குறித்தும் உதவுவதற்காக மாவட்ட அளவில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உதவி மையத்தை 0452- 2522995, 72006 47475 ஆகிய எண்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்புகொள்ளலாம் என்றாா்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் அன்பழகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா். ரேணுகா, மாவட்டக் கல்வி அலுவலா் (மேலூா்) பெ. இந்திரா, அரசுத் துறை அலுவலா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.