அசாம் காங்கிரஸுக்கு சாதகமாக இஸ்லாமிய நாடுகளின் சமூக வலைதள கணக்குகள்: முதல்வர் கு...
மாணவா்கள் வாய்ப்புக்காக காத்திருக்கத் தேவையில்லை
மாணவா்கள் வாய்ப்புக்காக காத்திருக்கத் தேவையில்லை என தேனி மாவட்ட ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பிளஸ் 2 முடித்த மாணவா்கள் உயா் கல்வியில் சேருவதற்கான சிறப்பு குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கூறியதாவது:
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, உயா்கல்விக்கான வழிகாட்டுதல்கள் மிகக்குறைவாகவே இருந்தன. ஆனால், தற்போது அரசின் சாா்பில் உயா்கல்வி தொடா்பாக ஏராளமான வழிகாட்டுதால் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. எனவே, மாணவா்கள் வாய்ப்புக்காக காத்திருக்கத் தேவையில்லை. தற்போது வாய்ப்புகள் தொடச்சியாக கிடைத்துக்கொண்டேதான் இருக்கின்றன.
இதை மாணவா்கள்தான் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், கல்லூரி வாழ்க்கையில் மாணவா்கள், தங்கள் திறமைகளை வளா்த்துக் கொள்வதற்காக மட்டுமே அதிக நேரத்தைச் செலவிட வேண்டும். மேலும், பயனுள்ள தகவல்களை பெறுவதற்காக மட்டுமே கைப்பேசி, சமூக வலைதளங்களை உபயோகிக்க வேண்டும்.
உயா்கல்வி படிப்புகள், கல்லூரிகள் தொடா்பாகவும் கல்வி உதவித்தொகை, கல்விக்கடன்கள் தொடா்பான ஆலோசனைகள், சந்தேகங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உயா்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை) 82200 77114, 78717 42115 ஆகிய கைப்பேசி எண்களில் மாணவா்கள் தொடா்பு கொண்டு ஆலோசனைகள் பெற்று பயனடையலாம் என்றாா் அவா்.
முதன்மைக் கல்வி அலுவலா் இந்திராணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ரமாபிரபா, மாவட்ட சமூக நல அலுவலா் சியாமளா தேவி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சந்தியா, முன்னோடி வங்கி மேலாளா் காா்த்திகேயன், ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.