பாக். எதிராக இன்றிரவு கிரிக்கெட் ஆட்டம்: பல்வேறு தரப்பிலிருந்தும் வலுக்கும் கண்ட...
மாதம் ரூ. 2000 வழங்கும் அன்புக் கரங்கள் திட்டம்: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!
பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம் முதல்வர் ஸ்டாலின் நாளை(செப். 15) தொடங்கி வைக்கிறார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஏற்றமிகுதமிழ்நாட்டைஉருவாக்கிட, குழந்தைகளின்கல்விமற்றும்அவர்களின்சீரானவளர்ச்சிக்குதமிழ்நாடுஅரசுபல்வேறுதிட்டங்களைசிறப்பானமுறையில்செயல்படுத்திவருகின்றது.
மிகவும் வறுமையில் வாழும் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களின்வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் “தாயுமானவர்“திட்டத்தின்ஒரு பகுதியாக, பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்கஇயலாத குழந்தைகளைஅரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், “அன்புக்கரங்கள்” திட்டம் தமிழ்நாடுஅரசால்அறிவிக்கப்பட்டது.
அக்குழந்தைகளின்18வயதுவரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, மாதம்ரூ. 2,000உதவித்தொகை வழங்குவதுடன்,பள்ளிப்படிப்பு முடித்தபின்னர் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்கவழிவகை
செய்யும்இத்திட்டத்தினைமுதல்வர்மு.க. ஸ்டாலின் நாளை(செப். 15)சென்னை, கலைவாணர்அரங்கத்தில்தொடங்கிவைத்து, குழந்தைகளுக்கு உதவித் தொகையினை வழங்கவுள்ளார்.
மேலும், பெற்றோர்இருவரையும்இழந்து 12-ஆம் வகுப்பு முடித்து, பல்வேறுஉயர்கல்விநிறுவனங்களில் தமிழ்நாடுஅரசின்முயற்சியால்சேர்க்கப்பட்டுள்ளமாணவ/ மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் அன்றைய நாள்வழங்கவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!